57 வெளிநாட்டினருக்கு ஸிக்கா பாதிப்பு

57 வெளிநாட்டினருக்கு ஸிக்கா பாதிப்பு

2 mins read
31ce530a-63e4-4a94-892c-81eec90926cd
-

சிங்கப்­பூ­ரில் ஸிக்கா தொற்­றி­ய­தாக உறுதி செய்­யப்­பட்ட 115 பேரில் 57 பேர் சிங்கப்­பூ­ரில் வசிக்­கும், வேலை செய்யும் வெளி­நாட்­ட­வர்­கள் எனச் சுகாதார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இந்திய நாட்டைச் சேர்ந்த 15 பேர் உட்பட ஏழு நாடு­களைச் சேர்ந்த­வர்­களுக்கு சிங்கப்­பூ­ரில் ஸிக்கா பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. 10 பங்க­ளா­தே­‌ஷி­யர்­கள், 23 சீன நாட்­ட­வர்­கள், ஆறு மலே­சி­யர்­கள், ஒரு இந்­தோ­னீ­சி­யர், ஒரு மியன்­மார் நாட்­ட­வர், சீன தைப்­பேயைச் சேர்ந்த ஒருவர் ஆகி­யோ­ருக்கு ஸிக்கா தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக நேற்று மாலை நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் சுகாதார அமைச்சு கூறியது. "பெரும்பா­லா­னோ­ருக்கு சாதா ரண உடல்­ந­லக்­குறை­வு­தான் ஏற்­பட்­டுள்­ளது. பெரும்பா­லா­னோர் குண­மடைந்­து­விட்­ட­னர். மற்­ற­வர்­கள் நல்­ல­ப­டி­யாக உடல்­ந­லம் தேறி வரு­கின்ற­னர்," என அமைச்சு குறிப்­பிட்­டது.

இந்­நிலை­யில், கொசுக்­களை ஒழிப்­ப­தில் சிங்கப்­பூரர்­கள் உதவ வேண்டும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் கேட்­டுக்­கொண்­ டுள்­ளார். "தற்போது அல்­ஜு­னிட், பிடோக் வட்­டா­ரங்களில்­தான் நோய் தொற்று உள்ளது. ஆனால் சிங்கப்­பூ­ரின் மற்ற இடங்களில் ஸிக்கா இருக்­கும் என்பதை நாம் எதிர்­பார்க்க வேண்டும். சிங்கப்­பூர் எங்கும் கொசுவை ஒழித்து, அவை பெருகும் இடங்களை அழிப்­பதே சிறந்த பாது­காப்பு நட­வ­டிக்கை­யா­கும்," என்று பிர­த­மர் லீ சியன் லூங் தமது ஃபேஸ் புக்கில் கூறி­யுள்­ளார். சிங்கப்­பூ­ரில் முதல் ஸிக்கா தொற்று பாதிப்பு அல்­ஜுனிட் பகு­தி­யில் வேலை பார்த்து, வசித்து வரும் மலேசிய நாட்டைச் சேர்ந்த பெண்­ணுக்கு கண்ட­றி­யப்­பட்­டது. சிங்கப்­பூ­ரில் ஸிக்கா தொற்­றி­யோர் எண்­ணிக்கை 115 ஆக அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக புதன்­கிழமை இரவு அமைச்சு கூறியது. பாதிக்­கப்­பட்­டோ­ரில் அல்­ஜு­னிட் கிர­சென்ட், சிம்ஸ் டிரைவ் பகு­தி­யில் வசிக்­கும் கர்ப்­பி­ணிப் பெண்ணும் ஒருவர்.

பிடோக் நார்த் அவென்யூ 3ல் உள்ள புளோக் 404ல் உள்ள வீட்டின் சமைய லறையில் தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரி ஒருவரும் பூச்சிக் கொல்லி ஊழியரும் பார்வை இடுகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்