கூடுதல் உற்சாகத்துடன் மீண்டும் 'கார்களில்லா ஞாயிறு'

கூடுதல் உற்சாகத்துடன் மீண்டும் 'கார்களில்லா ஞாயிறு'

1 mins read
bbea3333-4e61-4fd3-8c98-fd848d1feb33
-

நீட்டிக்கப்பட்ட புதிய பாதையில் கூடுதல் சாலை மூடல் நேரத்­து­டன் இரண்டு மாத இடை வெளிக்குப் பிறகு நேற்று மீண்டும் ஏற்பாடு செய்­யப்­பட்­டி­ருந்த 'கார்­களில்லா ஞாயிறு' நிகழ்ச்சியில் கலந்­து­கொண்­டோ­ரிடையே உற்­சா­கம் கரை­பு­ரண்­டோ­டி­யது. நகர வட்­டா­ரம், மத்திய வர்த்­தக வட்­டா­ரம் ஆகி­ய­வற்­றில் 5.5 கி.மீ. தூரத்­துக்கு போக்­கு­வ­ரத்­துப் பாதைகள் நேற்று காலை 8 மணி முதல் 11 மணி வரை மூடப்­பட்­டி­ருந்தன. சைக்­கி­ளோட்­டு­தல், நடைப்­ப­யிற்சி போன்ற குழு நடவடிக்கை களில் பொது­மக்­கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

முந்தைய 'கார்­களில்லா ஞாயிறு' நிகழ்ச்­சிகளுக்­காக 4.7 கி.மீ. தூரத்­துக்கு மட்டுமே பாதைகள் மூடப்­பட்­டி­ருந்தது குறிப்­பி­டத்­தக்­கது. சைக்­கிள்­கள், சருக்கு உருளை­கள் போன்ற­வற்­றுடன் பங்­கேற்க வந்திருந்தவர்கள் செல்­லப்­ பி­ரா­ணி­களை­யும் உடன் கொண்­டு ­வந்­தி­ருந்த­னர். இந்தச் சந்தர்ப்­பத் தைப் பயன்­படுத்தி அர­சாங்க அமைப்­பு­கள் ­மக்­களிடம் தக­வல்­ களை­ப் பகிர்ந்­துகொண்டன. பெரும்பாலா­ன­வர்­கள் வாகனம் ஓட்­டா­மல் இருப்­ப­து, சமூக நிகழ்­வு­கள் போன்ற பிற பயன் ­பாடுகளுக்காக சாலை­களைத் திறந்­து­வி­டு­வது ஆகியவற்றை ஊக்­கு­விப்­பதே இந்த நி­கழ்ச்­சி­யின் முக்கிய இலக்கு என நிகழ்ச்­சிக்கு ஏற்பாடு செய்­தி­ருந்த நகர மறு­சீ­ரமைப்பு ஆணையம் குறிப்­பிட்­டது.2016-10-31 06:00:00 +0800