ஜப்பானின் கியுஷு தீவில் உள்ள ஃபுகுவோகா நகரப் பிரதான சாலை ஒன்றில் நேற்றுக் காலை திடீரென பெரும் பள்ளம் உருவானதால் அவ்வழியே போக்குவரத்து முற்றாக முடங்கியது. சுமார் 800 வீடுகளுக்கு மின்விநியோகம் தடைபட்டது. பரபரப்பான ஹக்காட்டா ரயில் நிலையம் அருகே அதிகாலை 5.15 மணியளவில் சாலை புதையத் தொடங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. நிலத்தடி ரயில் சேவை விரிவாக்கத்திற்காக அப்பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. நேரம் செல்லச் செல்ல பள்ளம் பெரிதாகிக்கொண்டே இருந்ததாகவும் காலை 9 மணியளவில் எல்லாத் திசைகளிலும் 20 மீ. அளவிற்குப் பள்ளம் விரிவடைந்ததாகவும் கூறப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்
சாலை விழுங்கிப் பள்ளம்
1 mins read
-

