பிரதமர் லீ: அமெரிக்கா- சீனா உறவு கசந்தால் சிங்கப்பூர் நிலை சிரமம்

பிரதமர் லீ: அமெரிக்கா- சீனா உறவு கசந்தால் சிங்கப்பூர் நிலை சிரமம்

1 mins read
e42641fc-345c-42b4-bb22-136415fcbe4c
-

சிங்கப்பூர் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நட்பு நாடாக இருப்ப தால் அந்த இரண்டு பெரும் வல்லரசுகளுக்கும் இடைப்பட்ட உறவில் விரிசல் ஏற்பட்டால் சிங்கப்பூரின் நிலை சிரமமாகி விடக்கூடும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். பிபிசியின் 'ஹார்ட்டாக்' பேட்டி யில் பிரதமர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். அந்தப் பேட்டி நேற்று ஒளிபரப்பானது. அமெரிக்கா-சீனா இரு நாடுகளுக் கும் இடைப்பட்ட உறவு மிகவும் சிரமமானால் சிங்கப்பூரின் நிலைமை கடுமையானதாக ஆகும் என்று கூறிய திரு லீ, அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அமெரிக்கா வின் நண்பர்களும் சீனாவின் நண்பர்களும் சிங்கப்பூரை தங்கள் பக்கம் சேரும்படி நெருக்கும் சூழ் நிலை ஏற்படும் என்றார்.

மேலும் செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg

பிபிசி ஹார்ட்டாக் பேராளர் ஸ்டீபன் சாக்குருடன் (இடது) பிரதமர் லீ சியன் லூங். படம்: தொடர்பு தகவல் அமைச்சு