குடியிருப்புச் சொத்துச் சந்தை தொடர்பான விதிமுறைகளில் அரசாங்கம் சிலவற்றைத் தளர்த்தி இருக்கிறது. வீடு விற்பவர்களுக்கான முத்திரை வரி குறைக்கப்பட்டு உள்ளது. மொத்தக் கடனடைப்பு விகித கட்டமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு, சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவை கூட்டாக இந்த விதிமுறை மாற்றங்களை நேற்று அறிவித்தன. மாற்றங்கள் அனைத்தும் இன்று முதல் நடப் பிற்கு வருகின்றன. வாங்கிய வீட்டை நான்கு ஆண்டுகளுக்குள் விற்பவர்கள் விற்போருக்கான முத்திரை வரி கட்டவேண்டும் எனும் நடை முறை இதுவரை இருந்தது.
வீடு விற்பவருக்கான முத்திரை வரி குறைப்பு
1 mins read
-

