பிரிவினையைத் தூண்டக்கூடிய, தனிமைவாத போதனைகள் அல் லது அறிக்கைகள் மீது சிங்கப்பூர் அணுக்கக் கண்காணிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் வலியுறுத்தியுள்ளார். அத்தகைய கருத்துகள் மற்ற நாடுகளில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன என்று துணைப் பிரதமர் குறிப்பிட்டார். சமயக் கொள்கைகளைத் தவ றாகப் புரிந்துகொண்டு, பயங்கர வாதத் தடுப்புக்காவலில் உள்ளவர் களுக்குச் சரியான நெறிகளைப் போதித்து வரும் 'சமய மறு வாழ்வுக் குழு'வைச் சேர்ந்த உள் ளூர் முஸ்லிம் சமய அறிஞர்களின் வருடாந்திர ஒன்றுகூடலின்போது திரு டியோ இவ்வாறு தெரிவித்தார்.
டியோ: பிற சமயங்கள் மீது அவதூறு பரப்பக்கூடாது
1 mins read
-

