சமூக அறப்பணி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிபர்

சமூக அறப்பணி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிபர்

1 mins read
4122274a-696e-4562-905e-2bcd516c3c24
-

மக்கள் கழகத்தில் போத்தல்களுக்கும் கைப்பைகளுக்கும் வண்ணம் தீட்டும் பயிலரங்கு ஒன்றுக்கு நேற்று வருகையளித்தார் அதிபர் டோனி டான் கெங் யாம். பயிலரங்கில் ஈடுபடும் லுத்தரன் சமூகப் பராமரிப்புச் சேவைகள் அமைப்பின் பங்கேற்பாளர்கள், மெரிடியன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், மக்கள் கழகத்தின் ஊழியர்கள் ஆகியோரைக் கவனிக்கிறார் டாக்டர் டான். அதிபர் சவால் 2017க்காக மக்கள் கழகம் $250,000 நன்கொடை திரட்டியது. அதற்கான காசோலையை மக்கள் கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டெஸ்மண்ட் டான்னிடமிருந்து அதிபர் டான் பெற்றுக்கொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்