விஜய் குமார்-சுமிதா நாயர் தம்பதிக்கு இவ்வாண்டு தீபாவளி இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் நாள்! 2013 டிசம்பரில் திருமணமான இவர்கள் குழந்தைச் செல்வத்துக்காக ஏங்கினர். பிறகு செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை மூலம் கருத்தரித்த 35 வயது திருமதி சுமிதா கடந்த ஏப்ரலில் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். இறைவன் தந்த பரிசான மகன் அர்ஜூன் தேவ், செல்லப் பிராணி 'பப்பள்ஸ்' உடன் தீபாவளியைக் கொண்டாடவிருக்கும் சுமிதா- விஜய் தம்பதி, இந்த நன்னாளில் தங்களது பெற்றோர்களை நேரில் சந்தித்து, ஆசி பெற்று, அளவளாவி மகிழ உள்ளனர். படம்: திமத்தி டேவிட் செய்தி: epaper.tamilmurasu.com.sg
இன்ப தீபாவளி, இரட்டிப்பு மகிழ்ச்சி!
1 mins read
-

