கஸக்ஸ்தான் நாட்டில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்தவர்களில் 52 பேர் தீயில் கருகி மாண்டனர். இச்சம்பவத்தை கஸக்ஸ்தான் உள்துறை அமைச்சு உறுதிப்படுத் தியது. பேருந்தில் இருந்தவர்களில் ஐந்து பேர் மட்டுமே தப்ப முடிந்த தாகவும் தீக்காயம்பட்ட அவர் களுக்கு மீட்புப் பணியாளர்கள் அவ்விடத்திலேயே முதலுதவி அளித்ததாகவும் தகவல்கள் கூறு கின்றன. அக்டாவ் வட்டாரத்தில் அமைந் துள்ள இர்கிஸ் மாவட்டத்தில் நேற்றுக் காலை 10.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
பேருந்து எரிந்து 52 பேர் பலி
1 mins read
-

