சிங்கப்பூர் ஆற்றோரம் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் சிலையின் முன்பு நேற்று பல வண்ண புடவையுடன் ஏராளமான பெண்கள் திரண்டனர். சிங்கப்பூரின் இருநூறாவது நிறைவு நிகழ்வின் ஒரு பகுதியாக சுமார் 200 பெண்கள் இவ்வாறு பல வண்ணமயமாய் ஒன்றுகூடினர். சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், வியட்னாம், மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 42 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் அங்கு நிறைந்திருந்தனர். 'டெமுர்ட்ரேப்ஸ்' என்னும் குழு இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. மரின் பரேட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாத்திமா லத்தீஃப்பும் இந்த அணியில் இடம்பெற்றிருந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
ஆற்றோரத்திற்கு வண்ணம் சேர்த்த பெண்கள்
1 mins read
-

