ஈஸ்டர் தாக்குதல்; அமைதிக்காகப் பிரார்த்தனை

இலங்கையின் தலைநகர் கொழும் பில் ஈஸ்டர் தினத்தன்று வெடி குண்டு தாக்குதல் நிகழ்ந்து ஒரு மாதம் ஆகியுள்ளது. அத்தாக்கு தலில் உயிரிழந்தோரின் குடும்பத் தினர் தாக்கப்பட்ட தேவாலயத் திற்குச் சென்று தங்கள் அன்புக்கு உரியவர்களின் ஆத்ம அமைதிக் காக வழிபாடு செய்தனர்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்ற அந்தத் தாக்குதலில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 25 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு நிலவிய இந்தத் தாக்குதல் அமைதியை ஒரேயடியாகக் குலைத்திருக்கிறது. தாக்குதலில் 'மதர் ஒஃப் சேட்டன்' என்ற வெடிபொருள் பயன்படுத்தப் பட்டதாக புலனாய்வு விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தி ருப்பதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரும்பிப் பயன்படுத்தும் வெடிபொருள் இதுவே ஐ.எஸ் இத்தாக்குதலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர்.

2015ஆம் ஆண்டில் பாரிசிலும் 2017ஆம் ஆண்டில் மான்செஸ்டர் அரங்கிலும் கடந்தாண்டு இந்தோனீசிய தேவாலயங்களிலும் நிகழ்ந்த தாக்குதலில் இந்த வெடிபொருள் பயன்படுத்தப்பட்டது.
தாக்குதல் நிகழப்போவதை இந்தியா ஏப்ரல் மாதம் எச்சரித்தபோதும் இலங்கைப் புலனாய்வு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை அந்நாட்டின் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
தாக்குதல் தொடர்பான விசாரணையில் எட்டு நாடுகள் உதவி வருவதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!