மகாதீர் உறுதி : மூன்று ஆண்டுகளில் அன்வார் பிரதமர்

மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது, மூன்று ஆண்டுகளில் பதவி விலகி திரு அன்வார் இப்ராஹிம் பிரதமராவதற்கு வழிவிடப்போவதாக அறிவித்திருக்கிறார். “என்னைப் பொறுத்தவரை, நான் பதவி விலகி அன்வாரிடம் பிரதமர் பொறுப்பை ஒப்படைப்பதாக ஏற்கெனவே வாக்குறுதி அளித்துள்ளேன்,” என்று தாய்லாந்தில் தற்போது இருக்கும் அவர் 'சிஎன்பிசி' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

மலேசியாவின் கடன், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 விழுக்காடாக இருப்பதாகக் கூறும் டாக்டர் மகாதீர், அதனை 50 விழுக்காட்டுக்குக் குறைக்க மூன்று ஆண்டுகள் தேவைப்படுவதாகக் கூறினார். இருந்தபோதும், அந்த இலக்கு எட்டப்படாவிட்டாலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பதவியில் இருக்கப்போவதில்லை என்று அவர் சொன்னார்.

திரு அன்வார், தாம் ஈராண்டுக்குள் பிரதமராகப் பதவி ஏற்கப்போவதாக எதிர்பார்ப்பதாக பிப்ரவரி மாதம் கூறினார். கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னர், அரசாங்கம் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் திரு அன்வார் பிரதமராவர் என்று கூட்டணிக் கட்சிகள் இணங்கியதாகக் கூறப்படுகிறது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!