சாங்கி விமான நிலையத்தில் விமானப் பயணங்கள் தாமதம்

சாங்கி விமான நிலையத்தில் அனுமதியில்லாத ஆளில்லா வானூர்திகளாலும் மோசமான பருவநிலையாலும் 37 விமானப் பயணங்கள் தாமதமடைந்தன. விமான நிலையத்திலிருந்து புறப்படவேண்டிய 15 விமானப் பயணங்கள் தாமதமடைந்ததாகவும் மூன்று விமானங்கள் தரையிறங்க தாமதமானதாகவும் சிங்கப்பூர் சிவில் விமானத்துறை ஆணையம் செவ்வாய்க்கிழமை (25 ஜூன்) தெரிவித்தது.

“முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்களும் நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களும் இரவு 8.07 மணிக்கும் 9.07 மணிக்கும் இடையே சிறு இடைவெளிகளில் கவனத்துடன் வழிநடத்தப்பட்டன,” என்றது ஆணையம்.

சட்டவிரோதமான வானூர்திகளால் தாமதமடைந்த அல்லது திசைதிருப்பப்பட்ட விமானங்கள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கருடா, ஏர் ஏஷியா உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவை என்று ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்தது. அந்த வானூர்திகள் பொழுதுபோக்குக்காகத் தயாரிக்கப்பட்டவை அல்ல என்று கூறப்படுகிறது.

சம்பவத்தை விசாரித்து வருவதாக ஆணையம் கூறியது. ஆளில்லா வானூர்திகளின் தவறான பயன்பாட்டைக் கடுமையாகக் கருதுவதாக ஆணையம் கூறியது. விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்றும் அது கூறியது. குற்றவாளிகளுக்கு 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை, 20,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!