ஆப்பிளின் இரண்டாவது கடை ; ஜூவல் சாங்கியில்

தொழில்நுட்பப் பொருட்களை விற்கும் ‘ஆப்பிள்’ நிறுவனம் சிங்கப்பூரில் தனது இரண்டாவது கடையை சாங்கி விமான நிலையத்தின் ஜூவல் சாங்கி வளாகத்தில் திறக்கவுள்ளது. ஜூலை 13ஆம் தேதி அந்தக் கடை திறக்கும். ஜூவல் சாங்கி, மரினா பே சேண்ட்ஸ் ஆகிய இரண்டு இடங்களில் ‘ஆப்பிள்’ நிறுவனம் கடைகளை அமைக்கப்போவதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ மார்ச் மாதம் தெரிவித்தது.

ஜூவலில் அமையப்போகும் கடையின் பரப்பளவு போன்ற தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆயினும், ‘ஆப்பிள்’ கடைகளில் வழக்கமாக விற்கப்படும் பொருட்களான ஐ-போன் திறன்பேசிகள், மடிக்கணினிகள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் இங்கும் எதிர்பார்க்கலாம். நிரலிடுதல், செயலிகள் போன்றவற்றுடன் தொடர்புடைய சிறிய வகுப்புகளும் அங்கு நடத்தப்படும். ஒரு சில புதிய அம்சங்கள் சாங்கி ஜூவலிலுள்ள ‘ஆப்பிள்’ கடையில் பிரத்யேகமாக இடம்பெறும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்தது. கிட்டத்தட்ட 500 மீட்டர் நீளமான நிழற்பட நடை இவற்றில் ஒன்று. இந்த நடையின்மூலம் ஜுவல் சாங்கியின் நீர்வீழ்ச்சி, அதன் உள்புறத் தோட்டங்கள் ஆகியவற்றைப் படம் அல்லது காணொளி எடுக்க வாடிக்கையாளர்களுக்குக் கற்றுத்தரப்படும்.

2017ஆம் ஆண்டு மே மாதம் ஆப்பிள் முதன்முதலாக ‘நைட்ஸ்ப்ரிட்ஜ்’ கடைத்தொகுதியில் தனது முதல் கடையைத் திறந்தது. அப்போது அது தென்கிழக்காசியாவின் முதல் ‘ஆப்பிள்’ கடையாகவும் இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!