தொடக்கப்பள்ளியின் மேல் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் நிரலிடுதல் வகுப்புகள் நடத்தப்படும்.மின்னிலக்கப் பொருளியலுக்குத் தேவைப்படும் திறன்களை வளர்க்க அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளில் இது அங்கம் வகிக்கிறது.
தொடர்பு தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன், தனது அமைச்சுக்கான வேலைத்திட்ட கருத்தரங்கில் இதனை அறிவித்திருக்கிறார். சன்டெக் சிங்கப்பூர் மாநாடு மற்றும் கண்காட்சி நிலையத்தில் அந்தக் கருத்தரங்கு புதன்கிழமை (ஜூலை 10) நடைபெற்றது.
கல்வியமைச்சும் தொடர்பு, தகவல் அமைச்சும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த 10 மணி நேர மேம்பாட்டுத் திட்டம் இவ்வாண்டு சில பள்ளிகளில் தொடக்கப்பள்ளி இறுதி தேர்வுக்குப் பிறகு சோதனை செய்யப்படும்.‘கோட் ஃபோர் பன்’ என்ற அந்தத் திட்டம் 2020ஆம் ஆண்டுக்குள்அனைத்துப் பள்ளிகளிலும் அறிமுகம் செய்யப்படும்.