கரையோரப் பூந்தோட்டக் கொலை: குற்றவாளி எனத் தீர்ப்பு

கரையோரப் பூந்தோட்டத்திற்கு அருகே தனது காதலியின் கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது உடலைத் தீயில் எரித்த லெஸ்லி கூ குவீ ஹோக், கொலைக் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

31 வயது பெண் பொறியாளர் சுய் யாஜியேயை கூ கொலை செய்ததாக நீதித்துறை ஆணையர் ஆட்ரே லிம் உறுதி செய்தார்.

குமாரி சுய்யின் கழுத்தை இறுக்கமாகப் பிடிப்பதால் அவர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என்பது கூவுக்கு நன்றாகவே தெரியும் என்று நீதித்துறை ஆணையர் கண்டுபிடித்தார். அந்தப் பெண்ணின் கழுத்தை நெரிக்க முற்பட்டபோதும் அவரைக் கொல்வது தமது நோக்கமல்ல என்று கூ கூறியது நம்பத்தகாதது என்று ஆணையர் கூறினார்.

மாண்டுபோன பெண் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக கூ கூறியதையும் நீதிமன்றம் ஏற்க மறுத்தது. கூவைவிட சுய் உருவத்தில் மிகச் சிறியவர் என்பதால் அவ்வாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் நீதித்துறை ஆணையர் கூறினார்.

மாறாக, 20,000 வெள்ளி கடனை அடைக்க கூவை சுய் வற்புறுத்தியதால் அவரைக் கொலை செய்ய கூவுக்குக் காரணம் உள்ளது என்று கூறப்பட்டது.

கரையோரப் பூந்தோட்டத்திற்கு அருகே சுய்யைத் தனது காரில் கொன்ற பிறகு அவரது சடலத்தை லிம் சூ காங் லேன் 8ல் பல நாட்களாக எரித்ததை கூ மறுக்கவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!