ஜப்பான்: 18 ஆண்டுகளில் ஆக மோசமான கொலைச் சம்பவம்

ஜப்பானின் தோக்கியோ நகரிலுள்ள ஓர் உயிரோவிய அரங்கிற்குத் தீ வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர், தமது படைப்புகள் திருடப்பட்டுள்ளதாகச் சம்பவ இடத்தில் கூச்சலிட்டார் என்று ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளில் நிகழ்ந்த ஜப்பானின் ஆக மோசமான கொலைச் சம்பவத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அந்த 41 வயது ஆடவரை போலிசார் பிடித்துக்கொண்டிருந்தபோது, அவர் கோபத்துடன் கூச்சலிட்டு தமது படைப்புகள் திருடப்பட்டுள்ளதாகக் கூறியதுபோல தனக்குக் கேட்டதாகச் சம்பவ இடத்திற்கு அருகே இருந்த பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சந்தேக நபர், அனைவரைவும் சாகச் சொல்லி கத்திய பிறகு கியோட்டோ அனிமேஷன் நிறுவனத்தின் தலைமையகத்தின் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ மூட்டியதாகக் கூறப்படுகிறது. கியோட்டோ அனிமேஷன் நிறுவனத்துடன் அந்தச் சந்தேக நபருக்குத் தொடர்பில்லை என்று போலிசார் உறுதி செய்ததாக என்ஹெச்கே ஐப்பானிய ஊடகம் தெரிவித்தது.

இதற்கு முன்னர் 2001ஆம் ஆண்டில் தோக்கியோ நகரில் நடந்த இது போன்ற ஒரு சம்பவத்தில் 44 பேர் கொல்லப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!