(காணொளி): பாலியில் கையும் களவுமாகப் பிடிபட்ட இந்திய குடும்பம்

பாலியிலுள்ள ஹோட்டல் அறையில் இருந்த பொருட்களைத் திருடிய இந்திய குடும்பம் பிடிபட்டதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி வருகிறது. டுவிட்டர் பயனீட்டாளர் ஹேமநாத் தமது பக்கத்தில் கடந்த சனிக்கிழமை பதிவேற்றம் செய்த அந்தக் காணொளி இதுவரை 317,000க்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இருவர், ஹோட்டல் ஊழியர்கள் என நம்பப்படும் இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அந்தக் காணொளி காட்டியது.

ஹோட்டல் ஊழியர்களில் ஒருவர் குடும்பத்தினரின் பயணப் பெட்டியிலிருந்து ஹோட்டல் அறையின் சவர்க்காரம், துண்டுகள், கண்ணாடி, முடிகாயும் இயந்திரம் ஆகியவற்றை மீட்டெடுத்ததைக் காணொளி காட்டியது.

“நான் இதுவரை பார்த்த மக்களில் இந்தோனீசியர்கள் மிக மென்மையானவர்களாகவும் கனிவானவர்களாகவும் உள்ளனர் என்று இந்தோனீசியாவில் வசித்து பாலிக்குச் சென்றுள்ள என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும்,” என்று திரு ஹேமநாத் தமது பதிவில் கூறியுள்ளார்.

இந்தியாவையும் இந்தியர்களையும் இவர்கள் பெரிதும் மதிப்பதால் இத்தகைய ஒரு சம்பவம் இந்தியர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். திரு ஹேமநாத்தின் கருத்துகளுக்குப் பலர் சமூக ஊடகங்களில் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினாலும் இந்தியர்கள் அனைவரும் இப்படி இல்லை என்றும் சிலர் பதிவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!