பாலர் கல்வி
♦ இப்போது 24ஆக இருக்கும் கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகள் எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் இரு மடங்கிற்கு மேலாகும்.
♦ பாலர் பள்ளி மானியத்திற்குத் தகுதி பெற குடும்ப மாத வருமான உச்ச வரம்பு $7,500லிருந்து $12,000ஆக உயர்த்தப்படும்.
♦ எல்லாப் பிரிவுகளிலும் பாலர் பள்ளி மானியங்கள் உயர்த்தப்படும்.
♦ பாலர் பள்ளிகளில் அரசாங்க உதவியுடன் கூடிய இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
♦ குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 5,000 குழந்தைகள் பயன்பெறும் வகையில் ‘கிட்ஸ்டார்ட்’ திட்டம் விரிவுபடுத்தப்படும்.
உயர்கல்வி
♦ சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் (எஸ்ஐடி), சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் (எஸ்யுஎஸ்எஸ்) ஆகிய கல்வி நிலையங்களில் முழு நேர பொதுவான பட்டப் படிப்புகளுக்கான வருடாந்திர கல்விக் கட்டணம் $8,000லிருந்து $7,500ஆக குறைக்கப்படும்.
♦ பல்கலைக்கழக, பலதுறைத் தொழிற்கல்லூரி, மருத்துவ மாணவர்களுக்கான கல்வி உதவி நிதி உயர்த்தப்படும்.
முதிய ஊழியர்கள்
♦ ஊழியர்களின் திறன் மேம்பாட்டில் ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அரசாங்கம் கைகொடுக்கும்.
♦ ஊழியர்களின் ஓய்வு வயது 62லிருந்து 65ஆக உயர்த்தப்படும்.
♦ ஊழியர்களின் மறுவேலைவாய்ப்பு வயது 67லிருந்து 70ஆக உயர்த்தப்படும்.
♦ 55 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கான மசே நிதி பங்களிப்பு விகிதம் அதிகரிக்கப்படும்.
பருவநிலை மாற்றம்
♦ மரினா அணைக்கட்டில் இரண்டாவது நீரேற்று நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
♦ புலாவ் தெக்கோங்கில் கடலிலிருந்து மீட்கப்பட்ட நிலம் சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும்.
பரந்த தென் நீர்முகப்பு
♦ கிழக்கில் கரையோரப் பூந்தோட்டங்களில் இருந்து பாசிர் பாஞ்சாங் வரை சிங்கப்பூரின் தென்கடலோரப் பகுதியில் 30 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரந்த தென் நீர்முகப்பு அமைக்கப்படும்.
♦ பாசிர் பாஞ்சாங்கில் உள்ள இரு பழைய மின்னாற்றல் நிலையங்கள், கேளிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு மறுமேம்பாடு செய்யப்படும்.
♦ ஊழியர்களுக்காக டௌன்டவுன் சவுத்தில் உல்லாசத்தளம் ஒன்றைக் கட்ட என்டியுசிக்கு நிலம் ஒதுக்கப்படும்.