எரிவாயுக் கலன்களை ஏற்றிச் சென்ற லாரி விபத்தில் சிக்கியது; மூவர் பலி

மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் வடக்கு நோக்கிய தடத்தில் சிரம்பான் ஓய்வுப் பகுதிக்கு சற்று முன்பாக நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் சிக்கி மூவர் பலியாகினர். அந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இரண்டு லாரிகளும் சிக்கின. அவற்றுள் ஒரு லாரியில் எரிவாயுக் கலன்கள் இருந்தன.

ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அவருடன் பயணித்தவர், சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரியின் ஓட்டுநர் ரவீந்திரன், 26, ஆகிய மூவரும் மாண்டுபோனதாக நெகிரி செம்பிலான் போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறையின் தலைவர் இப்ராஹிம் முகமது அப்துல் காதிர் கூறினார். லாரியிலிருந்த எரிவாயுக் கலன்கள் சாலையில் சிதறிக் கிடந்தன. இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் ஏழு கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக ‘தி ஸ்டார்’ தெரிவித்தது. படம்: பெர்னாமா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!