சமய நல்லிணக்கத்திற்கான அச்சுறுத்தல்களுக்கும் சமய அமைப்புகளிலுள்ள வெளிநாட்டு ஆதிக்கத்திற்கும் எதிராக அரசாங்கம் துரிதமாகச் செயல்பட வழிசெய்யும் சட்டப் பரிந்துரைகள் இன்று காலை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்கும் சட்டங்களில் செய்யப்படும் மாற்றங்கள், அந்தச் சட்டத்தின்கீழ் விடுக்கப்படும் கட்டுப்பாட்டு உத்தரவுகளின் உடனடி அமலாக்கத்திற்கு வழி செய்கின்றன. தற்போதைய சூழலில், இத்தகைய உத்தரவுகள் நடப்புக்கு வரும் முன்னர் அரசாங்கம் 14 நாள் அறிவிப்புக் கடிதத்தை அனுப்பவேண்டும்.
இந்த தவணையின் நிறைவுக்காகக் காத்திராமல் சமய உணர்வுகளைக் காயப்படுத்தும் வாசகங்கள் இணையத்தில் பரவுவதை உடனே தடுக்க அரசாங்கத்திற்கு இந்த மாற்றங்கள் கைகொடுக்கும்.
மேலும், சமய அமைப்புகளின் முக்கிய பொறுப்புகளை சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தவாசிகள் மட்டுமே வகிக்கவேண்டும் என்றும் இது தொடர்பான புதிய மசோதா பரிந்துரைக்கிறது.