ஆர்டிஎஸ் எனப்படும் சிங்கப்பூர்-மலேசிய எல்லையைத் தாண்டிச் செல்லும் பெருவிரைவு ரயில் திட்டத்திற்கு தமது நாடு சம்மதிப்பதை அந்நாட்டின் பிரதமர் மகாதீர் முகம்மது அறிவித்திருக்கிறார். இந்தத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்வதற்கும் செலவுகளை 36 விழுக்காடு குறைப்பதற்கும் சில முன்மொழிவுகள் செய்யப்பட்டன.
சுல்தான் இஸ்கண்டார் சுங்கச் சாவடிகள், குடிநுழைவு, தடுப்புக்காவல் ஆணையத்தில் டாக்டர் மகாதீர் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
பரிந்துரை செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அந்த 4 கிலோமீட்டர் ரயில் திட்டத்தின் மொத்த செலவு 4.93 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 3.16 பில்லியன் ரிங்கிட்டாகக் குறையும் (1.03 பில்லியன் வெள்ளி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஆர்டிஎஸ் ஒப்பந்தத்திற்கு மலேசியா பரிந்துரைத்துள்ள மாற்றங்கள் குறித்து இரு நாடுகளுமே ஆராய்ந்து வருகின்றன.