காணாமல் போன முக்குளிப்பாளர்களில் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு

இந்தோனீசியாவின் லம்பொங் மாநிலத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் காணாமல் போன முக்குளிப்பாளர்களில் ஒருவரின் சடலத்தை இந்தோனீசிய மீனவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த முக்குளிப்பாளர், முக்குளிப்பு உடையுடனும் துணைக்கருவிகளுடனும் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தோனீசியாவின் தேசிய தேடல், மீட்பு அமைப்பின் பேச்சாளர் யூசுப் லத்தீஃப் தெரிவித்திருக்கிறார். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரம் இன்று பிற்பகலுக்குள் உறுதி செய்யப்படும் என்று திரு யூசுப் கூறினார்.

தேடல் நடவடிக்கையின் ஏழாவது நாளான கடந்த சனிக்கிழமையின்போதுகூட தேடல் முயற்சிகள் பலனளிக்காததால் அந்நடவடிக்கையை நாளை (நவம்பர் 12) வரை நீட்டிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். சனிக்கிழமை மொத்தம் 180 மீட்புப் பணியாளர்கள், காணாமல் போன அந்த மூன்று முக்குளிப்பாளர்களைத் தேட முயன்றனர். அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர், இருவர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.

மேலும் சுமத்திரா தீவுக்கும் ஜாவா தீவுக்கும் இடையிலான தேடுதல் இடம் 1,800 கடல் மைல்களுக்கு விரிவு செய்யப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!