நான்காவது தெற்காசிய புலம்பெயர் மாநாடு புலம்பெயர் சமூகத்துக்குச் சிறப்பாக பங்களித்த இரு அனுபவ சாலிகளுக்கு நேற்று முன்தினம் விருது வழங்கி கௌரவித்தது.
ஒருவர் சிங்கப்பூரின் அனுபவமிக்க அரசாங்க அதிகாரி ஜே.ஒய். பிள்ளை. அவருக்கு சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட் டது.
மற்றொருவர் உலகின் ஆகப் பெரிய அரசாங்க சார்பற்ற அமைப்பு களில் ஒன்றான ‘பிராக்’ அமைப்பை உருவாக்கிய பங்ளாதேஷ் நாட்டவ ரான ஃபசில் ஹசான் அபேட். அவ ருக்கு தெற்காசிய புலம்பெயர் சமூ கத்தின் தலைசிறந்த உறுப்பினர் விருது வழங்கப்பட்டது.
4வது தெற்காசிய புலம்பெயர் மாநாட்டின் விருந்து நிகழ்ச்சியில், விருதுகளை மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் வழங்கிச் சிறப்பித்தார்.
திரு ஃபசிலுக்குப் பதிலாக திரு மன்சூர் ஹசான் விருதைப் பெற்றுக் கொண்டார்.
1970ஆம் ஆண்டில் பங்ளாதேஷ் புரட்டிப்போட்ட போலா சூறாவளியால் பெரும் அவதிக்குள்ளான அந்நாட்டு மக்களின் துயர் துடைக்க திரு ஃபசில், 1972ல் பங்ளாதேஷ் கிராமப் புற மேம்பாட்டுக் குழுவை (பிராக்) அமைத்து, இயற்கைப் பேரிடராலும் 1971ல் இடம்பெற்ற பாகிஸ்தானுட னான சுதந்திரப் போராலும் பாதிக்கப் பட்டவர்களுக்கு பேருதவி புரிந்தார்.
இப்போது பிராக் அமைப்புக்கு, ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் உள்ள 11 நாடுகளில் கிளைகள் உண்டு. அவற்றில் 100,000 பேர் வேலை செய்கிறார்கள்.
திரு ஜே.ஒய். பிள்ளைக்கு அறி முகமே தேவையில்லை. அதிபர் ஆலோசனை மன்றத்தில் அதிக காலம் சேவையாற்றிய திரு பிள்ளை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனத்தைத் தோற்றுவித்தார். 1972 முதல் 1996 வரை அவர் எஸ்ஐஏ வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார்.
நிதி, தற்காப்பு, தேசிய வளர்ச்சி அமைச்சுகளில் நிரந்தரச் செயலாள ராகப் பணியாற்றிய அவர், ‘ஜிஐசி’ எனும் அரசாங்க முதலீட்டு நிறுவ னம், சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநராக வும் பணியாற்றியுள்ளார்.