பென்ஸ் காருடன் மோதிய விபத்தில் 64 வயது சைக்கிளோட்டி உயிரிழந்தார்

தெம்பனிஸ் அவென்யூ 3ல் இன்று (நவம்பர் 21) காலை 8.15 மணியளவில் மெர்சிடீஸ் பென்ஸ் கார் ஒன்று மோதியதில் 64 வயது சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

காரின் ஓட்டுநரான 47 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

சம்பவ இடத்தில், கறுப்பு நிற மெர்சிடீஸ் காரின் முன்பாக உடைந்துபோன குடையும் பல தாள்களும் காணப்பட்டன. அந்த காருக்கு அருகில் ரத்தக் கறையும் படிந்திருந்தது.

காரின் முன்புற வலது சக்கரத்திலும் அதற்கு அருகிலும் ரத்தம் காணப்பட்டது.

எதிர்ப்புற சாலையோரத்தில் வளைந்து, நெளிந்த சைக்கிள் ஒன்று காணப்பட்டது.

காலை உணவை வாங்கிக்கொண்டு வீடு திரும்பும் வழியில் சைக்கிளோட்டி விபத்தில் சிக்கியிருக்கலாம் என சீன நாளிதழான ஷின் மின் குறிப்பிட்டது.

இந்த சம்பவம் குறித்து காலை 6.13 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.

காரில் அடிபட்ட சைக்கிளோட்டியான 64 வயது ஆடவர் சுயநினைவில்லாத நிலையில் சாங்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஆனால், விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை தொடர்கிறது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!