போக்குவரத்து நடத்துநர்களில் ஒன்றான கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் மோதல் எச்சரிக்கை மற்றும் அவசரகால பிரேக் வசதிகளைக் கொண்ட நான்கு ‘வோல்வோ’ ரக பேருந்துகளை வாங்கியுள்ளது.
சிங்கப்பூருக்கு முதன் முதலாக வரப்போகும் இந்தப் பேருந்துகள் வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்தின் தனியார் பேருந்து சேவைகளுக்காகப் பயன்படுத்தப் படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாற்பத்தொன்பது இருக்கைகளைக் கொண்ட ‘வோல்வோ B8R’ ரக பேருந்து, எதிரில் மோதல் ஒன்று நிகழவுள்ளதாக உணரும்போது தானாக நின்றுவிடும்.
பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடாரைச் சார்ந்துள்ள உணர் கருவியும் கேமராவும் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் பேருந்து செல்லும்போது, தானாகச் செயல்படத் தொடங்கி விடும்.
மற்றொரு வாகனத்துடன் மோதல் ஏற்படும் சாத்தியம் நிகழும்போது, இந்த உணர் கருவி, ஓட்டு நரின் முன்னால் இருக்கும் பேருந் தின் செயலாக்கப் பகுதியில் சிவப்பு விளக்கு மூலம் எச்சரிக்கை சமிக்ஞையை அனுப்பி, எச்சரிக்கை ஒலியையும் எழுப்பும்.
அந்த எச்சரிக்கை சமிக்ஞையைப் பேருந்து ஓட்டுநர் கவனிக்கவில்லை என்றால், மோதலைத் தடுப்பதற்காக இந்த உணர்வு கருவி முதலில் மெதுவாக பிரேக்கை அழுத்தி, பின்னர் பேருந்து முழுமையாக நிற்கும் வரை பிரேக்கை வேகமாக அழுத்தும்.
மேலும் பேருந்து தான் செல்லும் தடத்தை விட்டு மற்ற தடத்துக் குள் செல்லும்போதும் ஓட்டுநருக்கு எச்சரிக்கை ஒலி மூலம் தெரிவிக்கும்.
இத்தகைய பாதுகாப்பு அம்சங் கள் சாதாரணமாக கார்களில் காணப்படும். ஆனால், இப்போது தான் முதன் முதலாக கனரக வாகனங்களில் பொருத்தப்பட்டு உள்ளது.
“ஆபத்தான நேரங்களிலும் விபத்துகளின்போதும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஓட்டுநர் களுக்கு உதவும்,” என்றார் கம்ஃபர்ட்டெல்குரோ பேருந்து பிரிவின் தலைமை நிர்வாகி திரு பாங் வெங் ஹெங்.
அடுத்த இரு ஆண்டுகளில் இத்தகைய பேருந்துகளை அதிகம் வாங்க கம்ஃபர்ட்டெல்குரோ திட்ட மிடுகிறது. அதன் ஆறு ஓட்டுநர்கள் புதிய பாதுகாப்பு அம்சங்களில்
பயிற்சி பெற்றுள்ளனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity