சாங்கி விமான நிலையத்தில் தீ எச்சரிக்கை மணி இயக்கப்பட்டதை அடுத்து அதன் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்த அனைவரும் உடனே வெளியேற்றப்பட்டனர்.
நள்ளிரவு 12.10 மணிக்கும் பின்னிரவு 1.40 மணிக்கும் இடையே விமான போக்குவரத்துக் கட்டுப்பாடு சேவைகள் மாற்று வழியாக இயக்கப்பட்டதாக சிங்கப்பூர் சிவில் விமான ஆணையம் இன்று மின்னஞ்சல் வழி தெரிவித்தது. இந்நேரத்தில் விமான நிலையத்தைவிட்டு புறப்படவிருந்த 50 விமானச் சேவைகள் குறைந்தது அரை மணி நேரமாகத் தாமதமடைந்தன. விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருந்த ஒன்பது விமான நிலையங்கள் திசைத்திருப்பப்பட்டன.
கட்டுப்பாட்டு கோபுரத்தில் தீச்சம்பவம் எதுவும் நிகழவில்லை என்று கூறிய சிவில் விமான ஆணையம், அவசர மணி ஒலித்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவித்தது. சில விமானங்கள் பாத்தாமிலுள்ள ஹங் நடிம் அனைத்துலக விமான நிலையத்திற்கும் சில விமானங்கள் கோலாலம்பூர் விமான நிலையத்திற்கும் திசைத்திருப்பப்பட்டன.
சம்பவம் குறித்து விமான பயணிகள் தங்களது அதிருப்தியை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினர்.