துருக்கிய தலைநகர் இஸ்தான்புல்லின் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் தீப்பிடித்துக்கொண்டது. நேற்று முன்தினம் நடந்த இந்தச் சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் மாண்டனர். சம்பவத்தின்போது விமானத்திற்குள் 177 பேர் இருந்தனர்.
பெகசஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த விமானம், விபத்தின்போது மூன்று பாகங்களாக உடைந்தது. விமான ஓட்டில் வெடித்த விரிசல்கள் வாயிலாக பயணிகள் வெளியேறியதை நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்த துருக்கிய தொலைக்காட்சி ஒளிவழிகள் காட்டின. இந்த விபத்தில் குறைந்தது 54 பயணிகள் காயமடைந்ததாகத் துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தின் விமானிகள் இருவரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அந்த விமானம் தரையிறங்கியபோது கடுமையான காற்றும் மழையும் பெய்துகொண்டிருந்ததாக ஊடகங்கள் கூறுகின்றன.