ஓடுபாதையில் உடைந்த விமானம்

துருக்கிய தலைநகர் இஸ்தான்புல்லின் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் தீப்பிடித்துக்கொண்டது. நேற்று முன்தினம் நடந்த இந்தச் சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் மாண்டனர். சம்பவத்தின்போது விமானத்திற்குள் 177 பேர் இருந்தனர்.

பெகசஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த விமானம், விபத்தின்போது மூன்று பாகங்களாக உடைந்தது. விமான ஓட்டில் வெடித்த விரிசல்கள் வாயிலாக பயணிகள் வெளியேறியதை நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்த துருக்கிய தொலைக்காட்சி ஒளிவழிகள் காட்டின. இந்த விபத்தில் குறைந்தது 54 பயணிகள் காயமடைந்ததாகத் துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தின் விமானிகள் இருவரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அந்த விமானம் தரையிறங்கியபோது கடுமையான காற்றும் மழையும் பெய்துகொண்டிருந்ததாக ஊடகங்கள் கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!