சிங்கப்பூரில் புதிதாக நால்வருக்கு கொரோனா கிருமித்தொற்று

சிங்கப்பூரில் புதிதாக நான்கு பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்களில் மூவர், கிருமி பரவல் இடமாக புதிதாக கண்டறியப்பட்டுள்ள ‘விஸ்லேர்ன் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என்று சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

எஞ்சிய ஒருவரின் தொடர்புகளைக் கண்டறியும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள், ஒருவர் ஜப்பானியர். எஞ்சிய ஒருவர் மியன்மார் நாட்டவர்.

அவர்கள் அனைவரும் அண்மையில் சீனாவுக்கோ, தென்கொரியாவின் டேகு அல்லது சியோங்டோ பகுதிக்கோ பயணம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே சமயம், கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து இருவர் வீடு திரும்பியதாகவும் அமைச்சு கூறியது. இவர்களையும் சேர்த்து, இதுவரை 74 பேர் முழுமையாகக் குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் எஞ்சியுள்ள 32 பேரில், பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகியோ, மேம்பட்டோ வருகிறது. எழுவர் இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!