தேர்தல் தேதி குறித்து பிரதமர் லீ சியன் லூங் கருத்து: இரண்டு தெரிவுகள்

சிங்கப்பூரில் விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தேர்தல் தேதி தொடர்பில் இரண்டு தெரிவுகள் இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.

இந்நிலையில், இப்போதைய சூழலையும் எதிர்காலக் கண்ணோட்டத்தையும் பொறுத்தே தேர்தல் நடத்தப்படும் தேதி முடிவு செய்யப்படலாம் என்று பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழுவின் அறிக்கையை அரசாங்கம் நேற்று (மார்ச் 13) வெளியிட்டது.

தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டுவிட்டதால் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், கொரோனா கிருமிக்கு எதிராகப் போராடி வரும் இந்த நேரத்தில் தேர்தல் நடத்தப்படக்கூடாது என எதிர்க்கட்சிகளில் சில வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், இப்போதைய சூழலைப் பார்க்கும்போது, நிலைமை சீரடைந்த பிறகு தேர்தலை நடத்துவது அல்லது முன்னதாகவே தேர்தலை நடத்தி முடிப்பது என இரு தெரிவுகள் இருப்பதாக பிரதமர் லீ குறிப்பிட்டார்.

இதன் தொடர்பிலான விரிவான செய்திகளுக்கு நாளைய (மார்ச் 15) தமிழ் முரசு நாளிதழின் அச்சுப் பிரதியை நாடுங்கள்!

#சிங்கப்பூர் #பொதுத்தேர்தல் 2020

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!