நாடாளுமன்றத்தில் பகுத்தறிவுமிக்க, ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகப் பங்காற்ற மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட பாட்டாளிக் கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருவாட்டி சில்வியா லிம் தெரிவித்துள்ளார்.
பாட்டாளிக் கட்சி இன்று காணொளி மூலம் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. அப்போது திருவாட்டி லிம் இக்கருத்துகளைத் தெரிவித்தார்.
“தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்கும் எதிர்க்கட்சியினருடன் இணைந்து செயல்பட அடுத்த சில ஆண்டுகளில் பல வாய்ப்புகள் அமையும் என நான் நம்புகிறேன் . எங்கள் நிலைப்பாடுகளை முன்வைக்கவும் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படவும் அவர்களுடன் இணைந் து செயல்பட வாய்ப்புகள் அமையும்,” என்று திருவாட்டி லிம் தெரிவித்தார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி அல்ஜுனிட் குழுத் தொகுதி, செங்காங் குழுத்தொகுதி, ஹவ்காங் தனித் தொகுதி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் விளைவாக தற்போது பாட்டாளிக் கட்சியிலிருந்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.