சிங்கப்பூரில் புதிதாக 188 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இன்று உறுதிசெய்யப்பட, இந்நாட்டில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 55, 292ஆக உயர்ந்தது,
புதிதாக பாதிக்கப்பட்டோரில் ஒருவர் சிங்கப்பூரர். அவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டதாக அமைச்சு கூறியது. வெளிநாடுகளில் இந்நோயைத் தொற்றி சிங்கப்பூருக்குத் திரும்பிய 12 பேருக்கு வீட்டில் தங்கும் உத்தரவு கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டோரில் பெரும்பகுதியினர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள்.
ஞாயிற்றுக்கிழமையன்று புதிதாக 175 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அறிவிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் தங்கும் அனைவரும் சோதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சு அப்போது தெரிவித்தது.