சிங்கப்பூரில் புதிதாக 48 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியிருப்பதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இதனுடன் இந்நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 56, 908க்கு உயர்ந்துள்ளது.
புதிய எண்ணிக்கையில் இரண்டு சமூகத் தொற்றுகள். இவ்விருவர் வேலை அனுமதி அட்டைதாரர்கள் என்று சுகாதார அமைச்சு கூறியது.
வெளிநாட்டில் இந்நோயைத் தொற்றிய ஐந்து பேருக்கு இங்கு வந்தடைந்ததுடன் வீட்டில் தங்கும் உத்தரவுக் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

