இவ்வாண்டு பொதுப் போக்குவரத்து கட்டண உயர்வு இல்லை

கொவிட்-19 சூழலில் பயணிகளுக்கு உதவும் வகையில் இவ்வாண்டு பொதுப் போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான சூழல்களில், தற்போதுள்ள போக்குவரத்து கட்டண மறுஆய்வு சூத்திரத்தின் அடிப்படையில் 4.4 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருக்கும் என பொதுப் போக்குவரத்து மன்றம் இன்று (செப்டம்பர் 4) தெரிவித்தது.

பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், அந்த நிறுவனங்களுக்கு பெருமளவு நஷ்டம் இருந்தபோதும், கட்டண உயர்வு நடவடிக்கை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆயினும், தற்போது நிலவும் சூழலைப் பார்க்கையில், அடுத்த ஆண்டும் கட்டண உயர்வு அதிகம் இருக்காது என்று கூறப்படுகிறது.

மேலும் 2 மில்லியன் வரையிலான சிங்கப்பூரர்கள் தொடர்ந்து சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்ய முடியும்.

2019க்கான சூத்திரத்தின்படி, ஆக அதிக அளவான 7 விழுக்காடு, பொதுப் போக்குவரத்துக் கட்டணம் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. 1998ஆம் ஆண்டிலிருந்து ஆக அதிக கட்டண உயர்வு இது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!