கொவிட்-19 சூழலில் பயணிகளுக்கு உதவும் வகையில் இவ்வாண்டு பொதுப் போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான சூழல்களில், தற்போதுள்ள போக்குவரத்து கட்டண மறுஆய்வு சூத்திரத்தின் அடிப்படையில் 4.4 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருக்கும் என பொதுப் போக்குவரத்து மன்றம் இன்று (செப்டம்பர் 4) தெரிவித்தது.
பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், அந்த நிறுவனங்களுக்கு பெருமளவு நஷ்டம் இருந்தபோதும், கட்டண உயர்வு நடவடிக்கை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆயினும், தற்போது நிலவும் சூழலைப் பார்க்கையில், அடுத்த ஆண்டும் கட்டண உயர்வு அதிகம் இருக்காது என்று கூறப்படுகிறது.
மேலும் 2 மில்லியன் வரையிலான சிங்கப்பூரர்கள் தொடர்ந்து சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்ய முடியும்.
2019க்கான சூத்திரத்தின்படி, ஆக அதிக அளவான 7 விழுக்காடு, பொதுப் போக்குவரத்துக் கட்டணம் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. 1998ஆம் ஆண்டிலிருந்து ஆக அதிக கட்டண உயர்வு இது.