சிங்கப்பூரில் ஆட்குறைப்பு எண்ணிக்கை இவ்வாண்டின் முதலாம் காலாண்டிலிருந்து மூன்றாம் காலாண்டில் 8,130க்கு அதிகரித்துள்ளது.
ஜூலை மாதத்தின்போது வெளியிடப்பட்ட முன்னோட்ட கணிப்பான 6,700யைக் காட்டிலும் இது வெகு அதிகம்.
முதலாம் காலாண்டின்போது இந்த எண்ணிக்கை 3,220. இரண்டாம் காலாண்டின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்பட்ட பின்னர் மொத்த வேலையிழப்பு எண்ணிக்கை 11, 350ஆக உள்ளது.
இந்த எண்ணிக்கை மேலும் மோசமாக இருந்திருக்கலாம் என்றது மனிதவள அமைச்சு. நிறுவனங்கள் கையாண்ட சிக்கன வழிமுறைகள், அரசாங்கத்தின் ஆதரவுத்திட்டங்கள் ஊழியர்களின் வேலைகளைக் காப்பாற்ற ஓரளவு கைகொடுத்திருக்கும் என்று தெரிவித்தது.
மேல் விவரங்களுக்காகக் காத்திருக்கவும்...

