லிட்டில் இந்தியா: ‘பாவாடைக்குள் படம் எடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட ஆடவரின் மரணத்துக்கு இயற்கையான நோய் நிலை காரணம்'

லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்தில் ஒரு பெண்ணின் பாவாடைக்குள் படம் எடுத்ததாக சந்தேகித்து, ஆடவர் ஒருவரை துரத்திப் பிடித்துச் சிலர் தடுத்து வைத்திருந்தனர். ஆனால் ஆடவர் மரணமடைந்தார்.

இந்நிலையில், தடுத்து வைத்தவர்கள் அதிக பலத்தைப் பயன்படுத்தவில்லை என்றும் ஆடவருக்கு நேர்ந்தது நோய் காரணத்தால் விளைந்த மரணம் என்றும் மரண விசாரணை அதிகாரி கமலா பொன்னம்பலம் இன்று கூறினார்.

பெண்ணின் பாவாடைக்குள் திரு ஆண்ட்ரு ஹோ சீ மெங் (46) படம் எடுப்பதைக் கவனித்த திரு இங் கிம் டோங், திரு நர்டோஸி தியரி, திரு ருடி இஸ்கந்தர் கான் ஆகியோர் துரத்தத் தொடங்கினர். நீவன் ரோட்டில் மூவரும் திரு ஹோவைப் பிடித்தனர்.

திரு ஹோவின் கைகால்களைப் பிடித்தபடி திரு நர்டோஸி கைபேசியை எடுத்துக்கொண்டார். அந்தக் கைபேசியில் பாவாடைக்குள் எடுக்கப்பட்ட 47 படங்கள் இருந்தன.

மேலும் இருவர் முன்வந்து திரு ஹோவைத் தடுத்து வைத்திட உதவினர். ஆனால் போலிஸ் வந்தபோது திரு ஹோ பேச்சுமூச்சின்றிக் கிடந்தார். அவர் உயிரிழந்துவிட்டார் என்று பின்னர் உறுதிசெய்யப்பட்டது.

இதய தசை தொடர்பான நோய் திரு ஹோவுக்கு இருந்ததாகவும் ஓடியதில் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டு, மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கும் என்றும் பிரேத பரிசோதனை செய்த தடயவியல் நிபுணர் தெரிவித்திருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!