சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி புதிதாக நான்கு பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தப் புதிய சம்பவங்களுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்றுகளின் எண்ணிக்கை 57,880க்குக் கூடியுள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டோரில் சமூக அளவில் ஒருவரும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியைச் சேர்ந்த மற்றொருவரும் அடங்குவர். சிங்கப்பூருக்கு வெளியே கொவிட்-19 கிருமியைத் தொற்றி இங்கு வந்த இருவருக்கு வீட்டில் தங்கும் உத்தரவுக்கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேல் விவரங்கள் இன்றிரவு அறிவிக்கப்படும்.