மின்சார கோளாறு - ரயில் சேவையில் தடை

1 mins read
012194fe-ac2f-4b45-adc2-79be70c9d144
-

எஸ்எம்ஆர்டியின் வடக்கு தெற்கு பாதையிலும் கிழக்கு மேற்கு ரயில் பாதையிலும் இன்று மாலை ஏற்பட்ட மின்சாரக் கோளாறு காரணமாக பயணிகள் தாமதம் அடைந்துள்ளனர்.

குவீன்ஸ்டவுன் நிலையத்திற்கும் கல் சர்க்கிள் நிலையத்திற்கும் இடையே பயணம் செய்பவர்கள் தங்களது பயண நேரங்களில் கூடுதலாக 25 நிமிடங்கள் தாமதமாகலாம் என்று பொது போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டி தெரிவித்தது. உட்லண்ட்ஸ் நிலையத்திற்கும் ஜூரோங் ஈஸ்ட் நிலையத்திற்கும் இடையே பயணம் செய்வோருக்கும் இதே ஆலோசனையை எஸ்எம்ஆர்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வழங்கியது.

ஜூரோங் ஈஸ்ட் நிலையத்தைத் தவிர்க்கும்படியும் பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.