உள்ளூர் ஊழியர்களைத் தக்கவைக்க வலியுறுத்து

உள்ளூர் ஊழியர்களைத் தக்கவைக்க வலியுறுத்து

2 mins read
53d8a48b-b75d-443c-91c9-c0d6457505c2
-

ஆட்­ கு­றைப்பு தவிர்க்க முடி­யாத பட்­சத்­தில், தொழி­லில் நிலைத் ­தன்­மையை உறு­தி ­செய்­வ­ தற்­காக தகுதி, திற­மை­ யு­டை­ய­வர்­களைத் தக்­க­ வைத்­துக்­ கொள்­வது போன்ற கார­ணங்­க­ளின் அடிப்­ப­டை­யில் நிறு­வ­னங்­கள் அதனை மேற்­கொள்ள வேண்­டும். அதே நேரத்­தில், சிங்­கப்­பூ­ரர்­களை மூலா­தாரமாகக் கொண்ட ஊழி­ய­ர­ணியைக் கட்டிக்காக்க வேண்­டிய தேவை உட்­பட நீண்­ட­கால நோக்­கி­லான தங்­க­ளது மனி­த­வளத் தேவை­களை நிறு­வனங்­கள் கருத்தில்­ கொள்ள வேண்­டும்.

மிகை­யான மனி­த­வ­ளம், பொறுப்­பான ஆட்­கு­றைப்பு நிர்­வா­கம் தொடர்­பில் முத்­தரப்பு ஆலோ­ச­னைக் குறிப்பு நேற்று வெளி­யி­டப்­பட்­டது. மனி­த­வள அமைச்சு, தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ், சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னம் ஆகி­யவை இணைந்து அந்த ஆலோ­ச­னைக் குறிப்பை வெளி­யிட்­டன.

தேசிய சம்­பள மன்­றத்­தின் அண்­மைய வழி­காட்டி நெறி­மு­றை­க­ளின் அடிப்­ப­டை­யில் மற்ற அனைத்து செல­வுக் குறைப்பு நட­வடிக்­கை­க­ளை­யும் எடுத்த பிறகு, கடைசி நட­வ­டிக்­கை­யா­கத்­தான் ஆட்­கு­றைப்பு மேற்­கொள்­ளப்­பட வேண்­டும் என்று நிறு­வ­னங்­கள் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளன.

"உள்­ளூர் ஊழி­யர்­க­ளின் விகி­தத்­தைக் குறைப்­ப­தாக ஆட்­குறைப்பு அமைந்­து­வி­டக்­கூ­டாது. ஆட்­கு­றைப்பு நட­வ­டிக்­கை­யின்­போது விகி­தாச்­சார அடிப்­ப­டை­யில் அதிக உள்­ளூர்­வா­சி­க­ளைத் தக்­க­வைப்­ப­தன் மூலம் இதை எட்ட முடி­யும்," என்று அந்த வழி­காட்டி நெறி­மு­றை­கள் கூறு­கின்­றன.

தொழில் நில­வ­ரம் மேம்­ப­டும்­போது, அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­களை வேலைக்கு எடுத்து தங்­க­ளது உள்­ளூர் ஊழிய­ர­ணியை வலுப்­ப­டுத்த நிறு­வ­னங்­கள் வெளிப்­ப­டை­யாக முயற்சி எடுக்க வேண்­டும் என்று அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

நாட்­டின் பொரு­ளி­யல் வளர்ச்சிக்கும் உள்­ளூர்­வா­சி­களுக்கு நல்ல வேலை­களை உரு­வாக்­க­வும் உத­வக்­கூ­டிய வெளி­நாட்­ட­வர்­களை வர­வேற்­கும் வித­மாக சிங்­கப்­பூர் தொடர்ந்து தனது கத­வு­க­ளைத் திறந்து வைத்­தி­ருக்­கும் என்­றும் அந்த வழி­காட்டி நெறி­மு­றை­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வாண்­டில் இரண்­டாம் முறை­யா­கப் புதுப்­பிக்­கப்­பட்ட இந்த வழி­காட்டி நெறி­முறை­கள், ஆட்­கு­றைப்பு நட­வ­டிக்­கையை பொறுப்­பு­ட­னும் உணர்­வு­பூர்­வ­மா­க­வும் மேற்­கொள்­வது எப்­படி என்­பது குறித்­தும் விவ­ரித்து இருக்­கிறது.

ஒப்­பந்­தத்­தில் குறிப்­பிட்­டுள்ள அல்­லது சட்­ட­பூர்­வ­மா­கத் தேவைப்­படும் காலத்­திற்­கும் முன்­ன­தா­கவே ஆட்­கு­றைப்பு குறித்து தக­வல் தெரி­விப்­பது, முடிந்­த­வரை ஆட்­குறைப்பு செய்­யப்­ப­டு­ப­வ­ரி­டம் தனி­யாக அதைப் பற்­றிச் சொல்­வது போன்­றவை அதில் அடங்­கும்.

ஆட்­கு­றைப்பு செய்­யப்­படும் ஊழி­யர்­களின் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­க­வும் அவர்­க­ளின் கருத்­து­க­ளைக் கேட்­க­வும் ஏது­வாக மனி­த­வ­ளப் பணி­யா­ளர்­களும் தொழிற்­சங்­கப் பிர­தி­நி­தி­களும் அவ்­வி­டத்­தில் இருப்­ப­தைப் பொறுப்­பான நிறு­வ­னங்­கள் உறுதி­செய்ய வேண்­டும்.

பணி­யி­டத்­தைக் காலி செய்யும்படி சொல்லு­முன், தாங்­கள் ஆட்­குறைப்பு செய்­யப்­படும் தக­வலை அறிந்து, அதற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக்­கொள்ள போதிய கால அவ­கா­ச­மும் அதற்­கான வெளி­யும் பாதிக்­கப்­படும் ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டும்.

தேவைப்­பட்­டால், பாதிக்கப்படுவோரின் உணர்­வு­சார் தேவை­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் வகை­யில் அவர்­க­ளுக்கு ஆலோ­சனை ஆத­ர­வும் அளிக்­கப்­பட வேண்­டும்.

ஆட்­கு­றைப்பின்போது நிறு­வ­னங்­கள் இந்த வழி­காட்டி நெறி­மு­றை­க­ளைப் பின்­பற்­றும் என மனி­த­வள அமைச்சு எதிர்­பார்ப்­ப­தாக அதன் பேச்­சா­ளர் கூறி­னார்.

"செல­வுக் குறைப்பு அல்­லது ஆட்­குறைப்பு நட­வ­டிக்­கை­க­ளின்­போது பொறுப்­பற்று நடந்­து­கொள்­ளும் நிறு­வ­னங்­க­ளுக்கு எதிர்­காலத்­தில் அர­சாங்க ஆத­ரவு வழங்­கா­தி­ருப்­பது அல்­லது வேலை அனு­ம­திச்­சீட்­டுச் சிறப்­பு­ரி­மை­களை ரத்து செய்­வது குறித்து அர­சாங்­கம் பரி­சீ­லிக்­கும்," என்று அந்­தப் பேச்­சா­ளர் எச்­ச­ரித்­தார்.