தாய்லாந்தில் ஐந்தாவது நாளாக ஆர்ப்பாட்டம்

1 mins read
78d8e57c-d596-4b3a-804a-edb3459aa95a
-

தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கின் தெருக்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐந்தாவது நாளாகக் கூடி, பிரதமர் பிரயுத் சனோ பதவி விலக வேண்டும் என தொடர்ந்து கோரி வருகின்றனர்.

பொதுக்கூட்டங்களைத் தடை செய்யும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டபோதும் ஆர்ப்பாட்டங்கள் தாய்லாந்து நேரப்படி பிற்பகல் நான்கு மணிக்கு பேங்காக்கில் தொடங்கின. இந்த ஆர்ப்பாட்டத்தால் ரயில் மற்றும் பேருந்து வசதிகளின் சேவை பாதிக்கப்பட்டுள்ளன.

இளையர்கள் வழிநடத்தும் 'பீப்பள்' என்ற இந்த இயக்கம், அந்நாட்டின் அரசமைப்புச் சட்டம் மற்றும் மன்னராட்சியின் சீர்திருத்தத்திற்காகவும் குரல் கொடுத்து வருகிறது.ஆர்ப்பாட்டக்காரர்களை வழிநடத்துவோரில் பலர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.