சிங்கப்பூரில் புதிதாக மூன்று கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்கள் 57, 973க்கு அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டோரில் ஒருவர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி ஒன்றைச் சேர்ந்தவர். மற்ற இருவர் வெளிநாடுகளில் நோய்த்தொற்றோடு இங்கு வந்தவர்கள். அவ்விருவருக்கும் வீட்டில் தங்கும் உத்தரவு கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே முன்னதாக கிருமித்தொற்றுக்குழுமமாக அறிவிக்கப்பட்டிருந்த நார்த் கோஸ்ட் லாட்ஜ் விடுதி இப்போது கிருமித்தொற்றுக் குழுமம் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 28 நாட்களாக இந்தக் குழுமத்துடன் வேறு எந்த புதிய நோய்ச்சம்பவங்களும் தொடர்பு படுத்தப்படவில்லை.