புதிதாக ஒருவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக திங்கட்கிழமை நண்பகலில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 58,020.
வெளிநாட்டில் இந்நோயைத் தொற்றிய அந்த ஆடவருக்கு வீட்டில் தங்கும் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலோ சமூகத்திலோ புதிதாக எந்தச் சம்பவங்களும் பதிவாகவில்லை.

