பேராசிரியர் ஜயகுமார்: கொவிட்-19 நீடித்தால் பிரதமர் லீ தலைமையில் மசெக அடுத்த தேர்தலை சந்திக்கும் நிலை வரலாம்

பேராசிரியர் ஜயகுமார்: கொவிட்-19 நீடித்தால் பிரதமர் லீ தலைமையில் மசெக அடுத்த தேர்தலை சந்திக்கும் நிலை வரலாம்

3 mins read
0dbe01bd-dfe3-483e-9bb9-6dcded8dfc12
புத்தக வெளியீட்டு விழாவில் பேராசிரியர் எஸ். ஜயகுமார் பேசுகிறார். தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் உடன் இருக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 நெருக்­கடி நீடித்­தால் பிர­த­மர் பத­வி­யில் தொடர்ந்து இருந்து, மசெக அணிக்குத் தலைமை தாங்கி அடுத்த தேர்­தலைச் சந்­திப்­பது பற்றி பிர­த­மர் லீ சியன் லூங் பரி­சீ­லிக்க வேண்டி இருக்­கும் என்று முன்­னாள் மூத்த அமைச்­சர் பேரா­சி­ரி­யர் எஸ். ஜய­கு­மார் தெரி­வித்து இருக்­கி­றார்.

'ஆளுமை: ஒரு சிங்­கப்­பூர் கண்­ணோட்­டம்' என்ற பேரா­சி­ரி­யர் ஜய­கு­மார் எழு­தி­யுள்ள புத்­த­கம் நேற்று வெளி­யி­டப்­பட்­டது.

அந்­தப் புத்­த­கத்­தில் அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். பிர­த­மர் லீக்கு 2022 பிப்­ர­வரி வந்­தால் 70 வய­தா­கும். அந்த வய­தில் பத­வியில் இருந்து ஓய்வு பெற­லாம் என்று தான் நம்­பு­வ­தாக திரு லீ முன்பே தெரி­வித்து இருக்­கி­றார்.

இருந்­தா­லும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று, 2020 பொதுத் தேர்­தல் ஆகியவற்றைத் தொடர்ந்து பிர­த­மர் திரு லீ பத­வி­யில் தொடர வேண்­டும் என்ற கருத்து தீவி­ர­ம­டைந்து இருக்­கிறது என்று புத்­த­கத்­தில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இவை எல்­லாம் கொவிட்-19 எவ்­வளவு காலத்­திற்கு நீடிக்­கும் என்­பதைப் பொறுத்து இருக்­கும் என்­றார் அவர். அடுத்த பொதுத் தேர்­த­லுக்கு முன்­பா­கவே வழக்­க­நிலை திரும்­பி­விட்­டால் பிர­த­மர் பத­வி­யில் இருந்து வில­கு­வது என்ற திரு லீயின் விருப்­பத்­திற்கு மக்­கள் ஆத­ரவு அளிப்­பார்­கள்.

ஆனால் கொவிட்-19 நெருக்­கடி தொட­ரும் பட்­சத்­தில் பதவி வில­கும் எண்­ணத்தை திரு லீ மீண்­டும் பரி­சீ­லிக்க வேண்­டும். நாட்­டிற்கு மிரட்­டல் அகன்ற பிறகே அவர் அடுத்த தலை­மு­றை­யி­டம் பொறுப்பை ஒப்­ப­டைக்க வேண்­டும் என்று சிங்­கப்­பூ­ரர்­களில் பல­ரும் விரும்­பு­வார்­கள் என்றே தான் நினைப்­ப­தாக பேரா­சி­ரி­யர் ஜய­கு­மார் குறிப்­பிட்டு இருக்­கி­றார்.

கொவிட்-19 பாதிப்­பு­களைக் கருத்­தில்கொண்டு பார்க்­கை­யில் தலை­மைத்­துவ மாற்­றம் பற்றி பேசு­வ­தற்கு இது சரி­யான நேர­மாக இருக்­காது என்றே தோன்­று­வ­தாக வெளியு­றவு அமைச்­சில் தனது புதிய புத்­த­கம் பற்றி பேட்டி அளித்த போது செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேரா­சி­ரி­யர் ஜயகு­மார் தெரி­வித்­தார்.

கொவிட்-19 நெருக்­கடி முற்­றி­லும் அக­லு­வதை உறு­திப்­ப­டுத்­தப் போவ­தாக பிர­த­மர் லீ சியன் லூங் கோடி­காட்டி இருக்­கி­றார்.

இதன்­மூ­லம் அவர் நான்­காம் தலை­முறை தலை­வர்­க­ளுக்­கும் புதி­தாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு பல பொறுப்­பு­களில் அமர்த்­தப்­பட்டு இருக்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பினர்­க­ளுக்­கும் விலை­ம­திப்­பில்­லாத வாய்ப்பை அளிக்­கி­றார்.

அவர்­கள் திரு லீயி­டம் இருந்­தும் மூத்த அமைச்­சர்­க­ளி­டம் இருந்­தும் கற்­றுக்­கொள்­ள­லாம் என்று புத்­த­கத்­தில் பேரா­சி­ரி­யர் குறிப்­பிட்டு உள்­ளார். சிர­ம­மான சூழ்­நி­லை­யில் நான்­காம் தலை­முறை தலை­வர்­கள் உறு­தி­யான போக்கை புலப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள் என்று குறிப்­பிட்ட அவர், இளம் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் இத­யத்­தை­யும் மன­தை­யும் வெற்றி­கொள்ள வேண்­டி­யது அவர்­கள் எதிர்­நோக்­கும் சவால் என்­றார்.

சிங்­கப்­பூரை நிறு­விய முன்­னாள் பிர­த­மர் லீ குவான் இயூ பற்றி தமது புத்­த­கத்­தில் பல விவ­ரங்­களை­யும் தெரி­வித்து இருக்­கும் பேரா­சி­ரி­யர், அவ­ருக்கு காலம் விலை­ம­திப்­பு­மிக்­க­தாக இருந்­தது என்­றார்.

உலக விவ­கா­ரங்­கள் பற்­றிய பய­னுள்ள எண்­ணங்­களைத் தெரி­விக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளைச் சந்­திக்க வே திரு லீ விரும்­பி­னார்.

ஆகை­யி­னால் அவர் அப்­போதைய வெளி­யு­றவு அமைச்­சுக்கு ஒரு செய்தி அனுப்பி இருந்­தார்.

எல்­லா­ரும் வந்து வேடிக்கை பார்க்க நான் விலங்­குக் காட்சி சாலை­யில் உள்ள பாண்டா அல்ல, தன்னைச் சந்­திக்க வந்­தி­ருக்­கும் ஒரு­வரை சந்­திப்­பது ஏன் முக்கி­யம் என்­பதை வெளி­யு­றவு அமைச்சு விளக்க வேண்­டும் என்று திரு லீ குறிப்­பிட்டு இருந்­ததாக புத்­த­கத்­தில் பேரா­சி­ரி­யர் தெரி­வித்­துள்­ளார்.

முக்­கி­ய­மான அமைச்­சர்­களை உள்­ள­டக்­கிய ஒரு சிறு குழுவை திரு லீ குவான் இயூ அமைத்­திருந்­தார். அவ­சர முடி­வு­களை எடுக்க வேண்டி இருக்­கும்­போது அந்­தக் குழுவைக் கூட்டி அவர் விவா­திப்­பார்.

அந்­தக் குழு­வுக்கு முத­லில் 'கிச்­சன் கேபி­னட்' என்று பெயர். பிறகு அது 'அர­சி­யல் குழு' என்று பெயர் மாறி­யதாக பேராசிரியர் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்