சீராக, கட்டுப்படியான விலையில் தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்ய ஆசியானுக்கு பிரதமர் லீ அழைப்பு

சீராக, கட்டுப்படியான விலையில் தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்ய ஆசியானுக்கு பிரதமர் லீ அழைப்பு

3 mins read
0f6b6b0c-d473-4b22-97c1-80d70a1bcb12
37வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் லீ சியன் லூங் (இடது). கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக மெய்நிகர் முறையில் இடம்பெறும் இந்த நான்கு நாள் மாநாட்டை வியட்னாம் ஏற்று நடத்துகிறது. படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

கொவிட்-19 தடுப்பூசிகள் கிடைத்­த­தும் அவை சம­மா­க­வும் சீரா­க­வும் கட்டுப்படியான விலை­யி­லும் தங்­கள் மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வதை தென்­கி­ழக்­கா­சிய நாடு­கள் உறு­தி­செய்ய வேண்­டும் என்று நேற்று தொடங்­கிய ஆசி­யான் உச்­ச­நிலை மாநாட்­டில் பிர­த­மர் லீ சியன் லூங் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

கொரோனா பர­வ­லின் நீண்­ட­கா­லத் தாக்­கத்தை மட்­டுப்­ப­டுத்த வட்­டார அள­வி­லான ஒத்­து­ழைப்­பின் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்­திய பிர­த­மர் லீ, தடுப்­பூசி பன்­முகத்­தன்­மைக்­கும் அழைப்பு விடுத்­தார்.

'கோவேக்ஸ்' போன்ற உல­க­ளா­விய தடுப்­பூ­சித் திட்­டங்­க­ளுக்­குச் சிங்­கப்­பூர் ஆத­ர­வ­ளிக்­கிறது என்று திரு லீ குறிப்­பிட்­டார். அத்­திட்­டத்­தில் சிங்­கப்­பூர் உள்­ளிட்ட பல ஆசி­யான் நாடு­களும் சிங்­கப்­பூ­ரின் வெளி­நாட்­டுப் பங்­கா­ளி­களும் உறுப்­பி­னர்­க­ளாக உள்­ளன.

"நமது வெளி­நாட்­டுப் பங்­கா­ளி­களும் ஆசி­யான் உறுப்பு நாடு­களும் நம்­பிக்கை அளிக்­கும் வகை­யில் பல தடுப்­பூ­சி­களை உரு­வாக்கி வரு­கின்­றன," என்று பிர­தமர் குறிப்­பிட்­டார்.

ஆசி­யான் வட்­டா­ரத்­தின் தேவை­களை நிறை­வு­செய்­யும் வித­மாக தடுப்­பூ­சி­கள் தயா­ரிப்­பிற்­கும் விநி­யோ­கத்­திற்­கும் வழி­வகை செய்ய அவர்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்ற வேண்­டும் என்று திரு லீ கேட்­டுக்­கொண்­டார்.

கொவிட்-19 ஆசி­யான் மீட்பு நிதிக்­காக சிங்­கப்­பூர் 100,000 அமெ­ரிக்க டாலர் (S$134,900) வழங்­க­வி­ருக்­கிறது. கொரோனா பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தத் தேவை­யான மருந்­துப் பொருள்­க­ளை­யும் மருத்­து­வக் கரு­வி­க­ளை­யும் கொள்­மு­தல் செய்ய ஆசி­யான் உறுப்பு நாடு­க­ளுக்கு அந்நிதி உதவுகிறது.

பொரு­ளி­ய­லைப் பொறுத்­த­மட்­டில், கொரோனா நெருக்­க­டிக்­குப் பிந்­தைய உல­கில் ஆசி­யா­னின் போட்­டித்­தன்­மையை மேம்­ப­டுத்­து­வ­தற்­குத் தலை­வர்­கள் தங்­க­ளது முயற்­சி­களை மீண்­டும் இரட்­டிப்­பாக்க வேண்­டும் என்று பிர­த­மர் சொன்­னார்.

ஆசி­யா­வின் இணைப்­புத்­தி­றன் 2025 பெருந்­திட்­டம், ஆசி­யான் அறி­வார்ந்த நக­ரங்­கள் கட்­ட­மைப்பு போன்ற கட்­ட­மைப்­பு­க­ளைக் கொண்டு அதைச் செய்ய முடி­யும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

அத்­து­டன், அண்­மை­யில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட ஆசி­யான் சுங்க போக்­கு­வ­ரத்து அமைப்பு, நாடு­களுக்கு இடையே பொருள் விநி­யோ­கத்­திற்கு வழி­வகை செய்ய உத­வு­கிறது.

"இத்­த­கைய திட்­டங்­க­ளால் நமது மீட்­சியை முடுக்­கி­விட முடி­யும். கொரோனா பர­வ­லுக்­குப் பிந்­தைய உல­கில் புதிய வாழ்க்­கை­முறை­க­ளுக்­குப் பழ­கிக்­கொள்­ள­வும் வர்த்­த­கம் புரி­ய­வும் தொழில்­நுட்­பத்தை நாம் முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்," என்­றார் திரு லீ.

ஆசி­யான் சமூக வரை­வுத்­திட்­டங்­க­ளின் இடைப்­ப­ருவ மறு­ஆய்வு உட்­பட பல துறை­களில் ஆசி­யான் முன்­னேற்­றம் கண்­டி­ருப்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

கொவிட்-19 பரவலுக்குப் பிந்­தைய ஆசி­யான் சமூ­கத்­தின் இலக்கை உரு­வாக்­கும் பணி­கள் தொடங்­கி­விட்­டன. பல ஆண்­டு­கா­லப் பேச்­சு­வார்த்­தைக்­குப் பிறகு வட்­டார நிலை­யி­லான விரி­வான பொரு­ளி­யல் பங்­கா­ளித்­துவ உடன்­பாடு நாளை மறு­நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை கையெ­ழுத்­தா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தென்­கி­ழக்­கா­சி­யா­வி­லும் ஆதிக்க சக்­திப் போட்டி இல்­லா­மல் இல்லை எனக் குறிப்­பிட்ட திரு லீ, அந்­தச் சவாலை எதிர்­கொள்ள வேண்டியுள்ளது என்­றார்.

அமெ­ரிக்கா-சீனா இடை­யிலான பதற்­ற­நிலை இந்த வட்­டா­ரத்­தைப் பெரும் நெருக்­க­டிக்கு உள்­ளாக்கி இருக்­கிறது என்­றும் ஆசி­யா­னின் நடு­நி­லைத்­தன்­மைக்­கும் ஒற்­று­மைக்­கும் அது சோத­னை­யாக இருந்து வரு­கிறது என்­றும் பிர­த­மர் கூறி­னார்.

இருந்­தா­லும், வல்­ல­ரசு நாடு­களுக்கு இடையே மேம்­பட்ட இரு­த­ரப்பு நம்­பிக்­கை­யை­யும் ஒத்­து­ழைப்­பை­யும் ஏற்­ப­டுத்­து­வ­தில் ஆசி­யான் குறிப்­பிட்ட அள­வில் பங்­க­ளிக்க முடி­யும் என்­றும் அவர் சொன்­னார்.

பயங்­க­ர­வாத எதிர்ப்பு, இணை­யப் பாது­காப்பு, எல்லை தாண்­டிய புகை­மூட்­டம் போன்ற வட்டார, உலக அளவிலான சவால்­களை எதிர்­கொள்ள இணைந்து பணி­யாற்­று­வதில் மற்ற நாடு­க­ளுக்கு ஆசி­யான் ஒரு நடு­நி­லைத்­தன்­மை­யு­டன் கூடிய தள­மாக விளங்­கு­கிறது என்ற மதிப்பை நாம் கட்டிக்­காக்க வேண்­டும் என்­றும் பிர­த­மர் லீ வலி­யு­றுத்­தி­னார்.