லிட்டில் இந்தியாவில் தேக்கா சென்டர் கடைக்காரர் ஒருவருக்கு கிருமித்தொற்று

சிங்கப்பூரில் இன்று புதிதாக ஆறு பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் ஒருவர் உள்ளூரில் சமூகத்தொற்றுக்கு ஆளானார்.

தேக்கா சென்டரிலும் அதன் அருகிலும் அதிகாரிகள் சந்தைக்கடைக்காரர்களை வியாழக்கிழமை பரிசோதித்தபோது அவர்களில் ஒருவருக்குத் தொற்று இருந்தது தெரியவந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கிருமி புதிதாக தொற்றிய மற்ற ஐவரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இன்று புதிதாக கொரோனா கிருமி தொற்றியவர்களையும் சேர்த்து மொத்தம் 58,205 பேர் பாதிக்கப்பட்டனர்.

இங்கு 19 நாட்களில் இரண்டாவது நாளாக இன்று உள்ளூரில் ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து 16 நாட்களாக உள்ளூரில் யாருக்குமே தொற்று இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று முதலாவதாக 32 வயது சிங்கப்பூரருக்கு கொவிட்-19 தொற்று இருந்தது தெரியவந்தது.

கடல் சேவைத் துறையைச் சேர்ந்த பொறியாளரான அவர், தெம்பனிஸ் மாலில் உள்ள ‘சோல் கார்டன்’ உணவகத்தில் குடும்ப உறுப்பினர்கள் 12 பேருடன் சேர்ந்து உணவு உண்டார்.

அவர் தொடர்பிலான கிருமித்தொற்று குழுமத்தில் பலர் தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்றாலும் அது மிகப் பெரிய குழுமமாக உருவெடுக்கும் சாத்தியம் குறைவு என நிபுணர்கள் கருத்துரைத்தனர்.

வெள்ளிக்கிழமை புதிதாக கிருமி தொற்றிய நால்வரும் இந்தியாவில் இருந்தும் இந்தோனீசியாவில் இருந்தும் வந்தவர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!