பிரிட்டன், அமெரிக்காவில் இவ்வாரம் தடுப்பூசி பயன்பாடு

பிரிட்டன், அமெரிக்காவில் இவ்வாரம் தடுப்பூசி பயன்பாடு

2 mins read

பிரிட்­ட­னி­லும் அமெ­ரிக்­கா­வி­லும் கொவிட்-19 தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை இந்த வாரம் தொடங்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பிரிட்­ட­னில் தடுப்­பூசி இயக்­கம் செவ்­வாய்க்­கி­ழமை தொடங்­கு­கிறது. அந்­நாட்­டின் 94 வயது எலி­ச­பெத் மகா­ராணி தடுப்­பூசி யைப் போட்­டுக்­கொள்­வார் என்று தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

அதே­வே­ளை­யில், அமெ­ரிக்­கா­வில் வரும் வெள்­ளிக்­கி­ழமை தடுப்­பூசி இயக்­கம் தொடங்­கும் என்று தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அமெ­ரிக்­கா­வின் ஃபைசர் நிறு­வ­னம் உரு­வாக்கி இருக்­கும் தடுப்­பூசி மருந்தை கொவிட்-19 கிரு­மிப் பர­வலை ஒழிப்­ப­தற்­கான தற்­கா­லிக அவ­சர மருந்­தா­கப் பயன்­ப­டுத்­த­லாம் என்று பிரிட்­டன் அங்­கீ­க­ரித்து இருக்­கிறது.

மத்­திய கிழக்கு நாடான பஹ்­ரை­னும் அதை ஏற்­றுக்­கொண்டு இருக்­கிறது. ஐரோப்பா நாடான சுவிட்­சர்­லாந்து ஜனவரி மாதம் தடுப்­பூசி இயக்­கத்­தைத் தொடங்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

ஃபைசர் மருந்தை தற்­கா­லிக அவ­சர மருந்­தா­கப் பயன்­ப­டுத்­த­லாம் என்று அமெரிக்­கா­வின் உணவு, மருந்து நிர்­வா­கத் துறை அங்­கீ­க­ரிக்­கும் பட்­சத்­தில், தடுப்பூசி இயக்­கம் வெள்­ளிக்­கி­ழமை தொடங்­கும் என்று அந்­தத் துறை­யின் ஊசி மருந்து ஆலோ­ச­னைக் குழு­வின் உறுப்­பி­ன­ரான ஜேம்ஸ் ஹில்­ரெத் கூறி­யதாக என்­பிசி நியூஸ் செய்தி நிறு­வ­னம் கூறி­யது.

கொவிட்-19 கிருமி உல­கம் முழு­வ­தும் 1.5 மில்­லி­ய­னுக்­கும் அதிக மக்­க­ளைக் கொன்­று­விட்­டது. கிரு­மித்­தொற்­றில் அமெ­ரிக்கா முத­லி­டத்­தில் இருக்­கிறது.

அமெ­ரிக்­கா­வில் கொவிட்-19 தாறு­மா­றாக அதி­க­ரித்து வரு­கிறது.

தொடர்ந்து மூன்­றா­வது நாளாக சனிக்­கி­ழமை ஆக அதிக எண்­ணிக்­கை­யில் மக்­கள் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­யி­னர்.

அன்று ஒரு நாள் மட்­டும் 227,885 பேர் பாதிக்­கப்­பட்­ட­தாக ஜான்ஸ் ஹாப்­கின்ஸ் பல்­க­லைக்­க­ழக புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

கொவிட்-19 கார­ண­மாக அமெ­ரிக்­கா­வில் சனிக்­கி­ழமை மட்­டும் 2,527 பேர் மாண்டு இருப்­ப­தாக தக­வல்­கள் குறிப்­பி­டு­கின்­றன.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 14.6 மில்­லி­ய­னைத் தாண்­டி­விட்­டது. மரண எண்­ணிக்கை ஏறக்­கு­றைய 281,000 ஆக இருக்­கிறது.

அதே­போல உல­கின் இதர பல நாடு­க­ளி­லும் ஒடுங்கி இருந்த கிருமி மறு­ப­டி­யும் தலை­யெ­டுக்­கத் தொடங்கி இருக்­கிறது.

தென்­கொ­ரி­யா­வில் ஒன்­பது மாத காலத்­தில் இல்­லாத அள­வுக்கு தொற்று கூடி­ய­தால் சமூக இடை­வெளி போன்ற கட்­டுப்­பா­டு­களை சோல் நக­ரம் கடு­மை­யாக்கி இருக்­கிறது.