சிங்கப்பூரில் 4 பல்கலைக் கழகங்களின் விடுதிவாசிகளுக்கு ஜனவரியில் இலவச கொவிட்-19 பரிசோதனை

சிங்கப்பூரில் உள்ள நான்கு தன்னாட்சி பல்கலைக்கழகங்களின் விடுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் கொவிட்-19 பரிசோதனை ஒரு முறை இலவசமாக அடுத்த மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS), நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (NTU), சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (SMU), சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (SUTD) ஆகியவற்றைச் சேர்ந்த விடுதிவாசிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்தது.

அதிகமானோர் வசிக்கக்கூடிய இந்த இடங்களில் கிருமித்தொற்று பரவும் அபாயம் இருக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட கல்வி அமைச்சு, பரிசோதனை செய்துகொள்ளும்படி மாணவர்களுக்குப் பரிந்துரைத்துள்ளது.

மற்ற பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யும் திட்டம் இப்போதைக்கு இல்லை எனவும் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகள், தேவை ஏற்படும்போது அது பற்றி கருதும் என்றும் கல்வி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

விரைவு ஆன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும், கொரோனா இருப்பது தெரிந்தால் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என NTU, SMU மாணவர்களுக்கு மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 பரிசோதனையை தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகக் குழுக்களுக்கு விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளின் அங்கம் இது என கல்வி அமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!