சிரமப்படும் ஊழியர்களை ஆதரிக்க புதிய திட்டம்

சிரமப்படும் ஊழியர்களை ஆதரிக்க புதிய திட்டம்

3 mins read
9c5454fe-27c9-4db2-88e6-52393965d46b
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 பெருந்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட குறைந்த, நடுத்­தர வரு­மா­னம் ஈட்­டும் ஊழி­யர்­கள் கூடு­தல் பலன்­பெ­றும் வகை­யில் புதிய மானி­யத் திட்­டம் அறி­விக்­கப்­பட்டு உள்­ளது. கொவிட்-19 மீட்சி மானி­யம் (சிஆர்ஜி) என்­னும் அத்­திட்­டத்தை சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு நேற்று அறி­வித்­தது. பெருந்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோரை ஆத­ரிக்க ஏற்­

கெ­னவே நட­வ­டிக்­கை­கள் அறி­விக்­கப்­பட்­ட­போ­தி­லும் வேலை­யை­யும் வரு­மா­னத்­தை­யும் தொடர்ந்து இழந்து வரு­வோ­ருக்கு உதவ புதிய திட்­டம் வகுக்­கப்­பட்டு உள்­ளது.

பாதிக்­கப்­பட்ட குறைந்த, நடுத்­தர வரு­மான ஊழி­யர்­கள் மானி­யம் பெற 2021 ஜன­வரி 18 முதல் விண்­ணப்­பிக்­க­லாம். அடுத்த ஆண்டு டிசம்­பர் 31 வரை விண்­ணப்ப காலம் நீடிக்­கும்.

தற்­போது நடப்­பில் உள்ள கொவிட்-19 ஆத­ரவு மானி­யம் அல்­லது சுய­தொ­ழில் புரி­வோர் தனி­ந­பர் வரு­வாய் நிவா­ர­ணத் திட்­டம் ஆகி­ய­வற்­றைக் காட்­டி­லும் வேறு­பட்­டது புதிய மானி­யத் திட்­டம். கொவிட்-19 ஆத­ரவு மானி­யம் பெற இம்­மாத இறு­திக்­குள் விண்­ணப்­பிக்க வேண்­டும். அதே­போல சுய­தொ­ழில் புரி­வோர் தனி­ந­பர் வரு­வாய் நிவா­ர­ணத் திட்­டம் ஆண்­டி­று­தி­யில் காலா­வ­தி­யா­கி­வி­டும்.

ஆனால் புதிய திட்­டம் அடுத்த ஆண்டு இறுதி வரை நீடிக்­கும். புதிய கொவிட்-19 மீட்சி மானி­யம் (சிஆர்ஜி) பாதிக்­கப்­ப­ட்டோ­ருக்கு வெவ்­வேறு வகை­யில் பல­ன­ளிக்­கும். ஆட்­கு­றைப்பு அல்­லது விருப்­ப­மற்ற வேலை ஒப்­பந்த ரத்து ஆகி­ய­வற்­றால் வேலை இழந்­தோர்.

தன்­வி­ருப்­ப­மின்றி தொடர்ச்­சி­யாக குைறந்­த­பட்­சம் மூன்று மாத காலத்­திற்கு சம்­ப­ள­மில்லா விடுப்­பில் வைக்­கப்­பட்­டோர்.

-இவ்­விரு பிரி­வி­ன­ரும் அதி­க­பட்­ச­மாக மாதம் $700 வரை மூன்று மாதங்­க­ளுக்கு பெறு­வர்.

அதேபோல, தொடர்ச்­சி­யாக மூன்று மாதங்­க­ளுக்கு குறைந்­த­பட்­சம் 50% சரா­சரி சம்­பள வெட்­டுக்கு ஆளான ஊழி­யர்­கள்.

தொடர்ச்­சி­யாக குறைந்­த­பட்­சம் மூன்று மாதங்­கள் வரை 50% சரா­சரி நிகர வர்த்­தக வரு­வாயை இழந்த சுய­தொ­ழில் புரி­வோர். (2019 அல்­லது 2020ஆம் ஆண்­டில் சரா­சரி நிகர வர்த்­தக மாத வரு­வா­யோடு ஒப்­பிட்ட பின்­னர் கணக்­கி­டப்­படும் இழப்பு).

-இந்தப் பிரிவினருக்கு மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் $500 மானியம் வழங்கப்படும்.

இந்த இழப்­பு­கள் எல்­லாம் இவ்­வாண்டு ஜன­வரி 23க்குப் பின்­னர் ஏற்­பட்­டி­ருக்க வேண்­டும். சிங்­கப்­பூ­ரில் முதல் கொவிட்-19 கிரு­மித்­தொற்று அந்த நாளில்­தான் உறுதி செய்­யப்­பட்­டது.

புதிய திட்­டம், குறைந்த குடும்ப வரு­மா­னப் பிரி­வி­னர் மற்­றும் அதிக வரு­வாய் இழப்­புக்கு ஆளா­னோ­ருக்கு மானி­யம் வழங்­குவதை நோக்கமாகக் கொண்டது என அமைச்சு தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்டு உள்­ளது.

மானி­யத்­திற்­குத் தகு­தி­பெற, கொவிட்-19 சூழ­லால் பாதிக்­கப்

­ப­டு­வ­தற்கு முன்பு வரை மொத்த மாதாந்­திர குடும்ப வரு­மா­னம் $7,800 அல்­லது அதற்­குக் கீழ் பெற்று வந்­தி­ருக்க வேண்­டும். அல்­லது மாதாந்­திர தனி­ந­பர் வரு­மா­னம் $2,600 அல்­லது அதற்­குக் கீழ் இருந்­தி­ருக்க வேண்­டும்.

கொவிட்-19 பெருந்­தொற்று தொடங்­கு­வ­தற்கு முன்பு ­வரை அவர்­கள் வரு­வாய் ஈட்­டும் செயல்­தி­ற­னைப் பெற்­றி­ருக்க வேண்­டும். அதா­வது, 2019 ஜன­வ­ரிக்­கும் இவ்­வாண்டு டிசம்­ப­ருக்­கும் இடைப்­பட்ட காலப் பகு­தி­யில் குறைந்­த­பட்­சம் ஆறு மாதங்­க­ளுக்­கா­வது அவர்­கள் வேலை­யில் இருந்­தி­ருக்க வேண்­டும்.

அதே­போல, சுய­தொ­ழில் புரி­வோர் தங்­க­ளது நிகர வர்த்­தக வரு­வாயை 2019 அல்­லது 2020ல் அறி­வித்­தி­ருக்க வேண்­டும். வேலை­தே­டிக்­கொண்டு இருப்­ப­தற்­கான சான்­று­களை காட்­டு­வ­தும் மானி­யம் பெறு­வ­தற்­கான தகு­தி­களில் ஒன்று. அல்­லது அர­சாங்­கம் தொடர்­பான இணை­யத்­த­ளங்­கள்வழி திறன்மேம்­பாட்­டுக்கு விண் ­ணப்­பித்­தது, நேர்­மு­கத் தேர்­வில் கலந்­து­கொண்­டது, வேலைப் பயிற்­சி­யில் பங்­கெ­டுத்­தது ஆகி­ய­வற்றுக்­ கான சான்­றை­ தர­வேண்­டும்.

அமைச்­சின் இணை­யத்­த­ளத்­தில் தின­மும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை மானி­யத்­ திற்­கான விண்­ணப்­பத்தை சமர்ப்­பிக்­க­லாம். விண்­ணப்­பத்தை பூர்த்தி செய்­வ­தில் உதவி தேவைப்­ப­டு­வோர் 1800-222-0000 என்­னும் காம்­கேர் நேரடி தொலை­பேசி எண்ணை அழைக்­க­லாம். அல்­லது Ask_SSO@msf.gov.sg என்­னும் முக­வ­ரிக்கு மின்­னஞ்­சல் அனுப்­ப­லாம். இணை­யம் வழி விண்­ணப்­பம் செய்ய இய­லா­தோர் அரு­கில் உள்ள சமூக சேவை அலு­வ­ல­கத்தை உத­விக்கு நாட­லாம்.