இந்தியாவில் இம்மாதம் தடுப்பூசி அறிமுகம்; முதற்கட்டமாக 300 மில்லியன் மக்களுக்கு மருந்தை செலுத்த இலக்கு

இந்தியாவில் இம்மாதம் தடுப்பூசி அறிமுகம்; முதற்கட்டமாக 300 மில்லியன் மக்களுக்கு மருந்தை செலுத்த இலக்கு

2 mins read
8d45f990-2b5c-4a41-8ada-55536d108ec8
படம்: ராய்ட்டர்ஸ் -

ஆக்ஸ்­ஃபர்ட் - ஆஸ்ட்ரஸெனிகா தடுப்பூசியின் அவ­ச­ர­ கா­லப் பயன்­பாட்­டுக்கு பிரிட்­டன் ஒப்­பு­தல் வழங்­கிய செய்தி கிடைத்­த­தும் இந்­திய சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் இந்­தி­யத் தயா­ரிப்பு தடுப்­பூ­சியை அங்­கீ­க­ரிப்­ப­தற்­கான பரி­சீ­ல­னை­யில் இறங்­கி­னர்.

மகா­ராஷ்­டி­ரா­வின் புனே நக­ரைத் தள­மா­கக்­கொண்ட சீரம் ஆய்­வுக்­க­ழ­க­மும் பாரத் பயோ­டெக் நிறு­வ­ன­மும் இணைந்து உரு­வாக்கி இருக்­கும் கோவி­ஷீல்ட் தடுப்­பூசிக்கு இந்­திய அதி­கா­ரி­கள் விரை­வில் ஒப்­பு­தல் வழங்க இருக்­கி­றார்­கள். கார­ணம், இந்­தத் தடுப்­பூசி ஆக்ஸ்ஸ்ஃ­பர்ட்-ஆஸ்ட்­ர­ஸெ­னிகா கூட்டு ஆராய்ச்­சி­யோடு இணைந்து இந்த இரு நிறு­வ­னங்­களும் உரு­வாக்கி உள்­ளன.

தங்­க­ளது தடுப்­பூசி தொடர்­பாக கூடு­தல் தர­வு­களை சீரம் ஆய்­வுக்­க­ழ­க­மும் பாரத் பயோ­டெக்­கும் வழங்கி உள்­ளன. அதன் மீதான ஆய்வை இந்­தி­யா­வின் மருந்து தரக்­கட்­டுப்­பாட்டு அமைப்­பைச் சேர்ந்த நிபு­ணர் குழு இன்று நடத்த உள்­ளது.

ஆய்வு மற்­றும் பரி­சீ­ல­னைக்­குப் பின்­னர் அவ­ச­ர­கா­லப் பயன்­பாட்­டுக்­கான ஒப்­பு­தலை கோவி­ஷீல்ட் தடுப்பு மருந்து பெற்­று­வி­டும். அத­னைத் தொடர்ந்து தடுப்­பூசி போடு­வது தொடங்­கும். அது நிகழ்­வது இன்­னும் சில மாதங்­கள் அல்­லது வாரங்­கள் என்று சொல்­வ­தைக் காட்­டி­லும் சில நாட்­கள் என்றே கூற­லாம் என டெல்­லி­யில் உள்ள எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­யின் இயக்­கு­நர் டாக்­டர் ரன்­தீப் குலே­ரியா தெரி­வித்து உள்­ளார்.

"ஆக்ஸ்­ஃபர்ட்-ஆஸ்ட்­ர­ஸெ­னிகா தடுப்­பூ­சிக்கு பிரிட்­டன் ஒப்­பு­தல் அளித்­தி­ருப்­பது என்­பது மிக­வும் நல்ல தக­வல். அதே­போன்ற தடுப்­பூ­சி­யைத்­தான் இந்­திய நிறு­வ­னங்­கள் தயா­ரித்து உள்­ளன. இந்­தத் தடுப்­பூ­சியை ஃபைசர் தடுப்­பூ­சி­யைப் போல் அல்­லாது இரண்டு முதல் எட்டு டிகிரி சென்டி­ கி­ரே­டில் எளி­தா­கச் சேமித்து வைக்க முடி­யும். ஃபைசர் தடுப்­பூ­சிக்கு மைனஸ் 70 டிகிரி சென்டி­ கி­ரேட் தேவைப்­படும். ஆனால் இந்­தி­யத் தடுப்­பூ­சியை சாதா­ரண குளிர்­சா­த­னப் பெட்­டி­யில் பத்­தி­ரப்­ப­டுத்த முடி­யும்," என்று திரு குலே­ரியா கூறி­யுள்­ளார்.

அவ­ரது கூற்­றுப்­படி இந்த ஜன­வரி மாதமே இந்­தி­யா­வில் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை தொடங்­கும் என்று தெரி­கிறது. அடுத்த ஆறு மாதங்­களில், அதா­வது ஜூலை மாதம் வரை முதற்­கட்ட தடுப்­பூ­சித் திட்­டம் தொட­ரும். அந்­தக் கால­கட்­டத்­தில் சுமார் 300 மில்­லி­யன் பேருக்கு தடுப்­பூசி போட இலக்கு வகுக்­கப்­பட்டு உள்­ளது.

குறிப்புச் சொற்கள்