இந்தி யாவில் விரைவில் கொவிட்-19 தடுப்பூசி அங்கீ கரிக்கப் படும் என்ற எதிர் பார்ப்பில் நாடு முழுவதும் இன்று கொவிட்-19 தடுப்பூசி ஒத்திகை தொடங்குகிறது.எல்லா மாநில தலை நகர்களிலும் குறைந்த பட்சம் மூன்று இடங்களில் ஒத்திகை நடத்தப்படும். சில மாநிலங்களில் மாவட்டங்களிலும் ஒத்திகை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.கொவிட்-19 தடுப்பூசி அங்கீகாரம் கிடைத்த உடனேயே அதை கூடுமானவரை பொதுமக்களில் பலருக்கும் எட்ட செய்வதைச் சாத்தியமாக்குவது ஒத்திகையின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்காக தமிழகம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களும் பரபரப்பாக ஆயத்தமாகின்றன. முதலில் 6 லட்சம் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தடுப்பூசி போடுவதற்காக தமிழகத்தில் 8,881 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தடுப்பூசியை எப்படி போடுவது என்பதில் முதல் கட்டமாக 21,170 தாதியருக்கு நிர்வாகம் பயிற்சி அளித்துள்ளது. 27 அரசாங்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 303 தனியார் மருத்துவமனைகள், 2,286 தொடக்க சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் குளிர்சாதன வசதிகளை உருவாக்கி அவற்றில் மருந் தைப் பத்திரப்படுத்த அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.
இந்தியா முழுவதும் தடுப்பூசி போடுவதற்காக ஏறக்குறைய 100,000 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. மாநில அரசாங்கங்கள், மாவட்ட அதிகாரிகள், மாநகர ஆணையர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட ஆயத்தமாகும்படி கட்டளையிடப்பட்டு இருக்கிறது. தளவாடப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்ப முறைகள் எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்தும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். வரும் ஜூலை வாக்கில் 30 கோடி பேருக்குத் தடுப்பூசியைப் போட்டு இருக்க வேண்டும் என்பது இலக்கு.மகாராஷ்டிரா, கேரளா முதலான மாநிலங்களில் தலைநகர் மட்டுமின்றி முக்கியமான இதர நகர்களிலும் ஒத்திகை நடைபெறுகிறது.
இவ்வேளையில், இந்தியாவின் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகள் நேற்று மீண்டும் கூடி கொவிட்-19 தடுப்பூசி அங்கீகாரம் பற்றி முடிவு செய்யஇருந்தார்கள்.சீரம் மருந்தாய்வுக் கழகம், பாரத் பயோடெக் நிறுவனம், ஃபைசர் நிறுவனம் ஆகியவை தங்கள் மருந்துகளை அங்கீகரிக்குமாறு கேட்டு அவற்றை இந்த அமைப்பிடம் தாக்கல் செய்து இருக்கின்றன.

